NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    "செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு
    நிகில் குப்தா மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

    "செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Srinath r
    Dec 15, 2023
    03:01 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்ய சதி செய்ததாக, அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தாவின் குடும்பத்தை, அவரின் விடுதலைக்காக செக் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தற்போது செக் குடியரசில் சிறையில் உள்ள குப்தா, அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக, X என அறியப்படும் அவரது குடும்ப நபர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில் X, குப்தா சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    இந்திய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை

    இந்த விவகாரம் இந்திய வெளியுறவுத் துறைக்கு, மிக முக்கியமான விஷயம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    நீதிபதி சஞ்சீவ் கண்ணா முதலில் மனுதாரரை "இந்தியாவுக்கு வெளியே உள்ள நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள்" என்று உத்தரவிட்டார்.

    மற்றொரு நாட்டில் கைது செய்யப்பட்டவர் தொடர்பான விவகாரங்களில், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

    "கைது செய்யப்பட்டவர் வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. கைது செய்யப்பட்டதில் சட்ட மீறல்கள் இருந்தால் அந்த நாட்டின் நீதிமன்றத்தை அணுக வேண்டும்" என கூறி வழக்கை, அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    மேலும் இந்த மனுவின் நகலை, மத்திய அரசுக்கு அனுப்பவும் நீதியரசர் அறிவுறுத்தினார்.

    3rd crad

    உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் என்ன குற்றம் சாட்டப்பட்டது?

    செக் குடியரசு நாட்டில் தான் கைது செய்யப்பட்டது பல்வேறு அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என, X என அறியப்படும் தனது குடும்ப நபர் மூலம் உச்சநீதிமன்றத்தில் இன்று குப்தா மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், தான் சரியான முறையில் கைது செய்யப்படவில்லை எனவும், தான் கைது செய்யப்படுவதற்கான வாரண்ட் தன்னிடம் காண்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

    மேலும், அமெரிக்கா அதிகாரிகள் என தங்களை தாங்களே சொல்லிக் கொண்ட நபர்கள், குப்தாவை உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் முன், மிரட்டியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    4th card

    அடிப்படை உரிமைகள் புறக்கணிக்கப்பட்டது- குப்தா வாதம்

    சிறையில் இருந்த முதல் 10 முதல் 11 நாட்களுக்கு, தனக்கு உண்பதற்கு பன்றி இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி வழங்கப்பட்டதாகவும், இந்துவான தன்னால் அதை உண்ண முடியாது என்பதால், தனக்கு சைவ உணவு வழங்கப்படவில்லை கூறியுள்ளார்.

    இது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நிகில் குத்தா இந்தியாவில் உள்ள தனது குடும்பத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை எனவும், அமெரிக்க அதிகாரிகள் அனுமதித்தால் மட்டுமே அவர் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்படுவார்கள் செக் குடியரசு அதிகாரிகள் தெரிவித்ததாகவும்,

    இறுதியாக, 20 நாட்களுக்கு பின்னர், அவர் இந்திய அதிகாரியை சந்திக்க அனுமதிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    5th card

    நிகில் குத்தா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

    குப்தா, அமெரிக்க-கனடிய குடியுரிமை பெற்ற காலிஸ்தானி பயங்கரவாதியான பன்னுனைக் கொல்ல, ஒரு கொலைகாரனை வேலைக்கு அமர்த்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

    அதற்காக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்க முன் வந்ததாகவும், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மேலும், பன்னுனை கொலை செய்த பிறகு கனடாவில் மேலும் நான்கு நபர்களை கொள்ள வேண்டுமென, தான் பணியமர்த்த முயன்ற நபரிடம் கூறியதாகவும் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.

    குப்தா பணிக்கமர்த்த முயன்ற நபர், ரகசிய அமெரிக்க பெடரல் அதிகாரியான காரணத்தால், இந்த திட்டம் முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    உச்ச நீதிமன்றம்
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    மின்சார வாகனங்களுக்காக அமெரிக்காவில் முதல் வயர்லெஸ் சார்ஜிங் சாலை அறிமுகம் எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஒரே ஆண்டில் $22 பில்லியனிலிருந்து $3 பில்லியனுக்கும் கீழே சரிந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு பைஜுஸ்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு  கொலை
    இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    கனடாவில் வாழும் இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதியின் சொத்துக்கள் பறிமுதல்  பஞ்சாப்
    கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது? இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  டெல்லி
    பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு: 2021இல் முக்கிய அரசியல் தலைவர்களின் மொபைல்கள் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரம் எதிர்க்கட்சிகள்
    தீபாவளி பண்டிகை - 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு  தமிழக அரசு
    ஒரே பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல்  டெல்லி

    வெளியுறவுத்துறை

    வீடியோ: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை வரவேற்றார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  இந்தியா
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    மணிப்பூர் கலவரம்: மத்திய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025