NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / '150 நாடுகளுக்கு இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன': ஹேக்கிங் குற்றச்சாட்டை மறுத்தது மத்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    '150 நாடுகளுக்கு இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன': ஹேக்கிங் குற்றச்சாட்டை மறுத்தது மத்திய அரசு 
    இது குறித்து விரிவான விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

    '150 நாடுகளுக்கு இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன': ஹேக்கிங் குற்றச்சாட்டை மறுத்தது மத்திய அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 31, 2023
    03:22 pm

    செய்தி முன்னோட்டம்

    "அரசு ஆதரவுடன்" ஹேக்கிங் செய்பவர்கள் தங்கள் ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.

    மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளும் பாஜகவை பிடிக்காதவர்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்திருப்பதாக கூறியிருக்கும் அரசாங்கம், எதிர்க்கட்சி எம்பிக்களின் கூற்றுக்களை நிராகரித்துள்ளது.

    இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "இது போன்ற அச்சுறுத்தல் எச்சரிக்கைகள் 150 நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. எனவே, இவை தவறான எச்சரிக்கைகளாக இருக்கலாம்." என்று கூறியுள்ளார்.

    க்ஜ்கள்

    'மக்களை திசை திருப்பும் முயற்சி இது': எதிர்கட்சிகளை சாடிய மத்திய அமைச்சர் 

    மேலும், இந்த மெசேஜ் குறித்து விரிவான விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த எச்சரிக்கைகளை பெற்றவர்களும் ஆப்பிள் நிறுவனமும் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அஷ்வினி வைஷ்ணவ் கேட்டு கொண்டார்.

    "இந்த நிர்ப்பந்தமான விமர்சகர்கள்... அவர்களுக்கு பெரிய பிரச்சினை இல்லாதபோது, ​​அவர்கள் இதுபோன்ற விஷயங்களை செய்கிறார்கள். அவர்கள் பிரதமர் மோடியின் தலைமையில் நடக்கும் முன்னேற்றத்திலிருந்து மக்களை திசை திருப்ப விரும்புகிறார்கள்." என்றும் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா(யுபிடி) தலைவர் பிரியங்கா சதுர்வேதி, எம்பி அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் தலைவர் சசி தரூர் உள்ளிட்டோர் தங்களுக்கு ஹேக்கிங் எச்சரிக்கை மெசேஜ் வந்ததாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், மத்திய அரசு அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    காங்கிரஸ்
    எதிர்க்கட்சிகள்
    மத்திய அரசு

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    பாஜக

    சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக்கோரி பாஜக மனு உதயநிதி ஸ்டாலின்
    கர்நாடகா மாநிலத்தில் பாஜக'வினர் போராட்டத்தினை கலைத்த தேனீக்கள் காங்கிரஸ்
    'இந்து மதம் உலகத்திற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது': ஆ.ராசாவின் வீடியோவை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை  தமிழ்நாடு
    சனாதன கொள்கை: கட்சியின் பக்கமா? கொள்கையின் பக்கமா? குழம்பும் அண்ணாமலை சனாதன தர்மம்

    காங்கிரஸ்

    அமித்ஷா Vs ராகுல் காந்தி: இன்று சூடுபிடிக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் மக்களவை
    ராகுல் காந்தி பாஜக எம்பிக்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததால் சர்ச்சை  நாடாளுமன்றம்
    நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு மத்திய அரசு
    நீலகிரியில் பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி நீலகிரி

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பாஜக
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  பாஜக
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  காங்கிரஸ்

    மத்திய அரசு

    கனடாவுடன் மோதல்; ஐநா சபையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய்சங்கர் உரை காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    மூடிஸ் நிறுவனத்தின் ஆதார் மதிப்பாய்வுக்கு பதிலளித்த மத்திய அரசு இந்தியா
    தாதாசாகெப் பால்கே விருது 2023- பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிப்பு விருது
    உஸ்பெகிஸ்தானில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு உஸ்பெகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025