NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2023
    09:53 am
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு
    ஐந்து நாட்களுகளில் நடந்த மூன்றாவது குண்டுவெடிப்பு இதுவாகும்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அமிர்தசரஸில் உள்ள ஹெரிடேஜ் தெரு அருகே இன்று(மே 11) அதிகாலை 1 மணியளவில் ஒரு சிறிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. ஐந்து நாட்களுகளில் நடந்த மூன்றாவது குண்டுவெடிப்பு இதுவாகும். "அமிர்தசரஸ் குறைந்த-தீவிர குண்டுவெடிப்பு வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன," என்று பஞ்சாப் காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் கூறியுள்ளார். முதல் குண்டுவெடிப்பு மே 6 அன்று நிகழ்ந்தது. இரண்டாவது குண்டுவெடிப்பு திங்கட்கிழமை அன்று பதிவு செய்யப்பட்டது. இன்று நடந்த குறைந்த தீவிர குண்டுவெடிப்பு பொற்கோயிலுக்கு அருகிலுள்ள ஹெரிடேஜ் தெருவில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நடந்தது.

    2/2

    அமிர்தசரஸ் ஹெரிடேஜ் தெருவில் நடந்த குண்டுவெடிப்புகள்

    தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் பஞ்சாப் போலீசார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து தடயவியல் மாதிரிகளை சேகரித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பின் போது, தூண்டுதல் பொறிமுறை எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அமிர்தசரஸ் ஹெரிடேஜ் தெருவில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் இரண்டு ஹெல்த் டிரிங்க் கேன்களில் நிரப்பப்பட்டிருந்ததது. திங்கட்கிழமை நடந்த வெடிவிபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்தில் டெட்டனேட்டர் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து ஒரு கொள்கலனில் வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மே 6 அன்று நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்தார் மற்றும் சில கட்டிடங்களின் கண்ணாடி முகப்புகள் சேதமடைந்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    பஞ்சாப்

    இந்தியா

    உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரிதம் சங்வான் உலக கோப்பை
    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 2 கர்நாடகா
    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1 பாஜக
    ஒரே பாலின தம்பதிகள் குழந்தையை தத்தெடுக்க சட்டம் அனுமதிக்கிறது: தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம்

    பஞ்சாப்

    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா
    காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி  இந்தியா
    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் இந்தியா
    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023