Page Loader
அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு
ஐந்து நாட்களுகளில் நடந்த மூன்றாவது குண்டுவெடிப்பு இதுவாகும்.

அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு

எழுதியவர் Sindhuja SM
May 11, 2023
09:53 am

செய்தி முன்னோட்டம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அமிர்தசரஸில் உள்ள ஹெரிடேஜ் தெரு அருகே இன்று(மே 11) அதிகாலை 1 மணியளவில் ஒரு சிறிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. ஐந்து நாட்களுகளில் நடந்த மூன்றாவது குண்டுவெடிப்பு இதுவாகும். "அமிர்தசரஸ் குறைந்த-தீவிர குண்டுவெடிப்பு வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன," என்று பஞ்சாப் காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் கூறியுள்ளார். முதல் குண்டுவெடிப்பு மே 6 அன்று நிகழ்ந்தது. இரண்டாவது குண்டுவெடிப்பு திங்கட்கிழமை அன்று பதிவு செய்யப்பட்டது. இன்று நடந்த குறைந்த தீவிர குண்டுவெடிப்பு பொற்கோயிலுக்கு அருகிலுள்ள ஹெரிடேஜ் தெருவில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நடந்தது.

details

அமிர்தசரஸ் ஹெரிடேஜ் தெருவில் நடந்த குண்டுவெடிப்புகள்

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் பஞ்சாப் போலீசார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து தடயவியல் மாதிரிகளை சேகரித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பின் போது, தூண்டுதல் பொறிமுறை எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அமிர்தசரஸ் ஹெரிடேஜ் தெருவில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் இரண்டு ஹெல்த் டிரிங்க் கேன்களில் நிரப்பப்பட்டிருந்ததது. திங்கட்கிழமை நடந்த வெடிவிபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்தில் டெட்டனேட்டர் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து ஒரு கொள்கலனில் வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மே 6 அன்று நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்தார் மற்றும் சில கட்டிடங்களின் கண்ணாடி முகப்புகள் சேதமடைந்தன.