NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைதானவர் யார்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைதானவர் யார்?
    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைதானவர் யார்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 25, 2024
    07:01 pm

    செய்தி முன்னோட்டம்

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய வழக்கில், நடைபாதையில் பிரியாணி கடை வைத்துள்ள 37 வயதான வியாபாரி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அந்த அறிக்கைபடி, ஞானசேகரன் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் இதற்கு முன்னரும் இதுபோல வளாகத்தில் அத்துமீறி நுழைந்து மாணவிகளை புகைப்படம் எடுப்பதும், அதை வைத்து மிரட்டுவதும் வாடிக்கையாக வைத்திருந்ததை விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அவர் மீது ஏற்கனவே 15 கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளதெனவும் தெரியவந்துள்ளது.

    வழக்கின் விபரம்

    காவல்துறை அறிக்கைபடி, வழக்கின் விபரம்

    23.12.2024 அன்று, கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்தின் பின்னால் பேசிக் கொண்டிருந்தபோது, அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் அவர்களை அச்சுறுத்தி, பின்னர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது. AWPS-ல் பதிவான இந்த வழக்கில், பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணைகளை துவங்கியது. கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்து வெளியான பரபரப்புத் தகவல்கள்#SunNews | #AnnaUniversity | #TNPolice pic.twitter.com/ALPKeOTzZ0

    — Sun News (@sunnewstamil) December 25, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அண்ணா பல்கலைக்கழகம்
    பாலியல் வன்கொடுமை
    பாலியல் தொல்லை
    கைது

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அண்ணா பல்கலைக்கழகம்

    பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்  பள்ளி மாணவர்கள்
    பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை., பொறியியல்
    பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள் பொறியியல்
    அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு; அடுத்தாண்டு அமல் தேர்வு

    பாலியல் வன்கொடுமை

    50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் கைது: ஹரியானாவில் பரபரப்பு  ஹரியானா
    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை நாடாளுமன்றம்
    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது சென்னை
    பிக்பாஸ் இல்லத்தில், தனக்கு நடந்த காஸ்டிங் கவுச் கொடுமைகளை பற்றி பேசிய நடிகை விசித்ரா பிக் பாஸ் தமிழ்

    பாலியல் தொல்லை

    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்

    கைது

    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்: அமெரிக்காவில் 900 பேர் கைது  அமெரிக்கா
    ஆவடி இரட்டை கொலை வழக்கில் கைதான வட மாநில இளைஞர்; வெளியான அதிர்ச்சி காரணம் கொலை
    பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார் சவுக்கு சங்கர்
    மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு  செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025