NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அஞ்சு ஸ்ரீபார்வதி மரணத்திற்கு பிரியாணி காரணமாக இல்லாமலும் இருக்கலாம்
    இந்தியா

    அஞ்சு ஸ்ரீபார்வதி மரணத்திற்கு பிரியாணி காரணமாக இல்லாமலும் இருக்கலாம்

    அஞ்சு ஸ்ரீபார்வதி மரணத்திற்கு பிரியாணி காரணமாக இல்லாமலும் இருக்கலாம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 10, 2023, 03:43 pm 0 நிமிட வாசிப்பு
    அஞ்சு ஸ்ரீபார்வதி மரணத்திற்கு பிரியாணி காரணமாக இல்லாமலும் இருக்கலாம்
    அஞ்சு ஸ்ரீபார்வதியின் தற்கொலை கடிதம் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன

    கேரளாவின் காசர்கோட்டை சேர்ந்த 20 வயது மாணவி அஞ்சு ஸ்ரீபார்வதி சமீபத்தில் உயிரிழந்தார். கெட்டுப்போன பிரியாணியை உண்டதாலேயே இவர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. ஆனால், இதற்கு வேறு காரணம் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். காசர்கோடு போலீஸ் கமிஷனர் வைபவ் சக்சேனா கூறுகையில், "இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. உயிரிழந்தவரின் உள் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார். "கெட்டுப்போன உணவை உண்டதால் மரணம் ஏற்பட வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனையின் போது வேறு சில பொருட்களையும் கண்டுபிடித்துள்ளனர்" என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    தற்கொலையாக இருக்குமா?

    இந்த வழக்கில் உயிரிழிந்த அஞ்சு ஸ்ரீபார்வதியின் தற்கொலை கடிதம் கிடைத்திருப்பதாக சில செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது குறித்து போலீஸார் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. காசர்கோடு அருகே உள்ள பெரும்பாளையைச் சேர்ந்த அஞ்சு ஸ்ரீபார்வதி, டிசம்பர் 31ஆம் தேதி காசர்கோட்டில் உள்ள ரோமன்சியா என்ற உணவகத்தில் வாங்கிய குழி மண்டி என்னும் ஒருவித பிரியாணியை உண்டார். அந்த உணவை உட்கொண்ட அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அன்றிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின், ஜனவரி 7ஆம் தேதி சனிக்கிழமை அன்று உயிரிழந்தார். மேலும், கெட்டுப்போன பிரியாணியை உண்டதே இவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், பிரியாணி சாப்பிட்டு ஃபுட்பாய்சனிங் ஏற்பட்டதால் இப்பெண் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று கூடுதல் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம் திரைப்பட வெளியீடு
    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்

    இந்தியா

    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி காங்கிரஸ்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023