NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அஞ்சு ஸ்ரீபார்வதி மரணத்திற்கு பிரியாணி காரணமாக இல்லாமலும் இருக்கலாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அஞ்சு ஸ்ரீபார்வதி மரணத்திற்கு பிரியாணி காரணமாக இல்லாமலும் இருக்கலாம்
    அஞ்சு ஸ்ரீபார்வதியின் தற்கொலை கடிதம் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன

    அஞ்சு ஸ்ரீபார்வதி மரணத்திற்கு பிரியாணி காரணமாக இல்லாமலும் இருக்கலாம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 10, 2023
    03:43 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவின் காசர்கோட்டை சேர்ந்த 20 வயது மாணவி அஞ்சு ஸ்ரீபார்வதி சமீபத்தில் உயிரிழந்தார். கெட்டுப்போன பிரியாணியை உண்டதாலேயே இவர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.

    ஆனால், இதற்கு வேறு காரணம் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    காசர்கோடு போலீஸ் கமிஷனர் வைபவ் சக்சேனா கூறுகையில், "இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. உயிரிழந்தவரின் உள் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார்.

    "கெட்டுப்போன உணவை உண்டதால் மரணம் ஏற்பட வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனையின் போது வேறு சில பொருட்களையும் கண்டுபிடித்துள்ளனர்" என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    தற்கொலை

    தற்கொலையாக இருக்குமா?

    இந்த வழக்கில் உயிரிழிந்த அஞ்சு ஸ்ரீபார்வதியின் தற்கொலை கடிதம் கிடைத்திருப்பதாக சில செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது குறித்து போலீஸார் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

    காசர்கோடு அருகே உள்ள பெரும்பாளையைச் சேர்ந்த அஞ்சு ஸ்ரீபார்வதி, டிசம்பர் 31ஆம் தேதி காசர்கோட்டில் உள்ள ரோமன்சியா என்ற உணவகத்தில் வாங்கிய குழி மண்டி என்னும் ஒருவித பிரியாணியை உண்டார்.

    அந்த உணவை உட்கொண்ட அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அன்றிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    அதன்பின், ஜனவரி 7ஆம் தேதி சனிக்கிழமை அன்று உயிரிழந்தார்.

    மேலும், கெட்டுப்போன பிரியாணியை உண்டதே இவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

    ஆனால், பிரியாணி சாப்பிட்டு ஃபுட்பாய்சனிங் ஏற்பட்டதால் இப்பெண் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று கூடுதல் விசாரணை நடந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை

    இந்தியா

    இந்தியாவில், ஒரே மாதத்தில், 45,000க்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்தது ட்விட்டர் ட்விட்டர்
    சாம்சங் கேலக்ஸி F04 விற்பனைக்கு அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் உள்ளே ஆண்ட்ராய்டு
    இளைய தலைமுறையினரின் பிரச்சனை என்ன? ஹர்ஷ் கோயங்கா செய்த ட்வீட்! வைரல் செய்தி
    சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க முயற்சி - உலகளவில் 5 ஆம் இடத்தில் இந்தியா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025