NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம்
    பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சென்னா ராவ்(சட்டை இல்லாமல் இருப்பவர்).

    ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம்

    எழுதியவர் Srinath r
    Dec 12, 2023
    03:19 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில், கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    அமாவாசை நாள் என்பதாலும், வைகுண்ட ஏகாதேசி இன்று தொடங்குகிறது என்பதாலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் இன்று வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணி அளவில், கோயிலுக்குள் குழுவாக வந்த ஆந்திராவைச் சேர்ந்த 30 ஐயப்ப பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா, சாமியே சரணம் ஐயப்பா உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட தனியார் அமைப்பைச் சேர்ந்த பாதுகாவலர்கள், அவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது.

    2nd card

    கோவிலுக்குள் ரத்தம் சிந்தியதால் பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது

    பாதுகாவலர்கள் கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியது.

    இந்நிலையில், பரத் உள்ளிட்ட மூன்று பாதுகாவலர்கள் இணைந்து, சென்னா ராவ் என்ற பக்தரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ராவின் மூக்கு உடைந்து ரத்தம் சொட்டியது.

    இதனால் கருவறைக்கு முன் உள்ள காயத்ரி மண்டபத்திலேயே, ரத்தம் சொட்ட சொட்ட அவர் அமர்ந்திருந்தார்.

    பின்னர் அவர் வெளியேற்றப்பட்டு, கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, காலை 10 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    இதற்கிடையே, சென்னா ராவ் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பாதுகாவலர்கள் மீதும், பாதுகாவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் பக்தர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    3rd card

    பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் மீது பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தியதற்காக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும் இது தொடர்பாக காட்டமான ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் "இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை" என பதிவிட்டுள்ளார்.

    இந்து சமய அறநிலையத்துறையின் இத்திமிரே, கோவில் நிர்வாகத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என பாஜக கூறுவதற்கு பல காரணங்களில் ஒன்றாகும் என கூறியுள்ளார்.

    இச்சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்ட பாஜக சார்பில், ஸ்ரீரங்கம் கோயில் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

    4th card

    சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்

    கோவிலுக்குள் வந்த ஆந்திர மாநில பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன், அங்கிருந்த உண்டியலை பிடித்து ஆட்டிக்கொண்டு இருந்ததாகவும்,

    மேலும், தட்டி கேட்ட பாதுகாவலரின் முடியை பிடித்து அருகில் இருந்த உண்டியலில் மோத செய்ததாகவும், மற்ற பக்தர்கள் யாரையும் தரிசனம் செய்ய விடாமல் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

    சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், கோவில் நிர்வாகம் சார்பில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சம்பவம் குறித்து அண்ணாமலையின் ட்விட்

    A government which has no faith in Hindu Dharma has no business to be in Hindu Temples.

    The Iyyappa devotees who have had 42 days of Vrath, with all devotion, wanted to pray to Ranganatha Swamy after their return from Sabarimala.

    The Iyyappa devotees questioned the long wait… pic.twitter.com/4BbNii9La5

    — K.Annamalai (@annamalai_k) December 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    ஆந்திரா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்

    ஆந்திரா

    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் விவசாயிகள்
    பொதுமக்கள் வங்கி கணக்குகளில் திடீர் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள்  தெலுங்கானா
    திருப்பதி ஏழுமலையானுக்கு 108 தங்க தாமரைகள் நன்கொடை  திருப்பதி
    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது  காவல்துறை

    காவல்துறை

    மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் மும்பை
    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  சபரிமலை
    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது சென்னை
    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு விபத்து

    காவல்துறை

    விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை  விருதுநகர்
    Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை? திருவண்ணாமலை
    காலணியை துடைக்க வைத்து இஸ்லாமிய மாணவியை இழிவுபடுத்திய ஆசிரியை: கோவையில் பரபரப்பு  கோவை
    'மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை' - ஆதரவு தெரிவிக்கும் சீமான்  சீமான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025