NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு

    எழுதியவர் Nivetha P
    Mar 14, 2023
    07:01 pm

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம், கெடார் அருகே அன்புஜோதி என்னும் ஆசிரமம் 18ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது.

    அங்கு தங்கியிருந்த ஆதரவற்றோர், மனநலம் சரியில்லாதோரை கொடுமைசெய்வதாகவும், மர்மமான முறையில் அங்கு தங்கியுள்ளோர் காணாமல் போவதாகவும் புகார்கள் எழுந்தது.

    பின்னர் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில் தற்போது தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர்.ஆனந்த் அவர்கள் தலைமையிலான குழுவினர் டெல்லியில் இருந்துவந்து இன்று(மார்ச்.,14)அதிரடி ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

    தொடர்ந்து இவ்வழக்கினை விசாரித்துவரும் சிபிசிஐடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனியிடமும் விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.

    தொடர்ந்து ஆசிரமத்திலிருந்து காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவோரையும் நேரில்சென்று சந்தித்து விசாரணை நடத்தியுள்ளது இந்த குழு.

    அதன்பின்னர் ஆசிரமத்தில் அதன் உரிமையாளர் அறை மற்றும் மனநலம் குன்றியோரை தங்கவைத்திருந்த அறையினையும் மூடி,சீல் வைத்துள்ளனர்.

    டாக்டர் ஆனந்த்

    மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் 35 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல்

    இது குறித்து டாக்டர் ஆனந்த் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து டெல்லியிலிருந்து மூன்று குழுக்களாக கள ஆய்வினை மேற்கொள்ள நாங்கள் வந்துள்ளோம்.

    இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தோருக்கு செயற்கையான முறையில் போதை பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் 35 ஆயிரம் மாத்திரைகள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது எங்கிருந்து வாங்கப்பட்டது என விசாரித்து வருகிறோம். இன்னும் 15 நாட்களில் தங்களிடமிருந்து வாங்கப்பட்டதா என கூறுவதாக முண்டியம்பாக்கம் மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.

    மேலும் இரவு நேரங்களில் டார்க் ரூம் என்னும் இருட்டு அறையில் அழைத்து சென்று உடல்நிலை சரியாகிவிட கூடும் என கூறி ஜெபம் செய்து மத மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று டாக்டர் ஆனந்த் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விழுப்புரம்
    தமிழ்நாடு
    டெல்லி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் தமிழ்நாடு
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் கேரளா
    ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு உலக செய்திகள்
    "வயது முதிர்ந்த காலத்தில் நம்மை நாமே பராமரித்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்": கவிஞர் வைரமுத்து கோலிவுட்
    ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு

    டெல்லி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்
    டெல்லி ஏர் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம் விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025