NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு சிபிசிஐடி விசாரணை

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை

    எழுதியவர் Nivetha P
    Feb 25, 2023
    03:47 pm

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.

    அங்கு தங்கியிருந்த ஆதரவற்றோர், மனநலம் சரியில்லாதோரை கொடுமை செய்வதாகவும், மர்மமான முறையில் அங்கு தங்கியுள்ளார் காணாமல் போவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

    இது குறித்த விசாரணை தற்போது சிபிசிஐடி போலீசாரால் 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 20 பேர்களால் கையாளப்படுகிறது.

    இதன் உரிமையாளர் ஜூபின் பேபி, அவரது மனைவி உள்பட 8 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி அளிக்கக்கோரி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இது குறித்த விசாரணை இன்று நடந்தது. இதற்கிடையே அந்த ஆசிரமத்தில் இருந்த 6 பேர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    7 பேர் கொண்ட குழு

    பெங்களூர் ஆட்டோ ராஜா நடத்தும் ஆசிரமத்தில் விசாரணை

    அதன்படி அதில் சத்யமங்கள பகுதியை சேர்ந்த ஜாபருல்லா, தென்காசியை சேர்ந்த லட்சுமி அம்மாள், அவரது மகன் முத்து விநாயகம் ஆகியோர் புகைப்படங்களை விழுப்புரம் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, கடலூர் என தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பொதுமக்கள் பார்வையில் படும்படி ஆங்காங்கே வெளியிட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஜூபின் பேபியிடம் விசாரணை நடத்தியதில் பெங்களூரில் தனது நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் ஆசிரமத்திற்கு ஜாபருல்லா உள்பட 53பேரை அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார்.

    அதில் ஜாபருல்லா உள்பட 16பேர் மட்டும் மாயமாகிபோனது தெரியவந்துள்ளது.

    இதனால் 7பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் குழு பெங்களூர் சென்று ஆட்டோ ராஜா ஆசிரமத்திலும் விசாரணை நடத்தினார்கள் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விழுப்புரம்
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் போராட்டம்
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025