NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம்
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம்

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம்

    எழுதியவர் Nivetha P
    Feb 23, 2023
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.

    அங்கு தங்கியிருந்த ஆதரவற்றோர், மனநலம் சரியில்லாதோரை கொடுமை செய்வதாகவும், மர்மமான முறையில் அங்கு தங்கியுள்ளார் காணாமல் போவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

    இது குறித்து கெடார் போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

    அப்பொழுது அங்கு தங்கியிருந்தோரை கட்டிவைத்து சித்திரவதை செய்தல், போதை மருந்து அளித்தல், பெண்களை பலாத்காரம் செய்தல், உள்நோக்கத்துடன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்தல் போன்றவைகள் அரங்கேறியது தெரியவந்துள்ளது.

    அதன்படி, அந்த ஆசிரமத்தின் உரிமையாளர், அவரது மனைவி உள்பட மேலும் சில பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கால அவகாசம்

    மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி விசாரணை

    இதனையடுத்து போலீசார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரை கைது செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியானதை பார்த்து தாமாக முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று(பிப்.,22) இவ்வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன் காப்பகம் தொடர்பான அனைத்து விவரங்களையும் விசாரித்தார்.

    பின்னர் இது குறித்த விரிவான அறிக்கையினை 6 வாரத்தில் அளிக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விழுப்புரம்

    சமீபத்திய

    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் போராட்டம்
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025