NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
    இந்தியா

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
    எழுதியவர் Nivetha P
    Feb 17, 2023, 11:40 am 0 நிமிட வாசிப்பு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் இங்கு தங்கவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சாலைகளில் திரியும் மனநல பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோரை அழைத்து வந்து சிகிச்சையளித்து அவர்களது குடும்பத்தாருடன் சேர்த்து வைப்பதே இவர்களது பணியாக இருந்துவந்தது என கூறப்படுகிறது. இதன் உரிமையாளர் ஜூபின் பேபி(45), கேரளாவை சேர்ந்தவர். இந்நிலையில் இந்த ஆசிரமத்தில் திருப்பூரை சேர்ந்த ஜாபருல்லா என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அவர் திடீரென மாயமானநிலையில் அவரது உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்கள். இதன்பேரில் துவங்கிய விசாரணையில் இந்த ஆசிரமம் குறித்த பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மீட்கப்பட்டோரில் 60 பேர் வேறு காப்பகங்களில் பத்திரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

    கெடார் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் அங்கு தங்கியிருந்தோரை கட்டிவைத்து சித்திரவதை செய்தல், போதை மருந்து அளித்தல், பெண்களை பலாத்காரம் செய்தல், உள்நோக்கத்துடன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்தல் போன்றவைகள் அரங்கேறியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அந்த ஆசிரமத்தின் உரிமையாளர், அவரது மனைவி உள்பட மேலும் சில பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டோரில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 203 பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து அவர்களுள் குணமடைந்த 60 பேர் திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடவேண்டியவை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    விழுப்புரம்

    தமிழ்நாடு

    தமிழக ஆரம்பக் கல்விக் கொள்கைக்கான குழுவிற்கு இருக்கும் சிக்கல் இந்தியா
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி போக்குவரத்து விதிகள்
    கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு கர்நாடகா
    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள் மாவட்ட செய்திகள்

    விழுப்புரம்

    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் போராட்டம்
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம் மனித உரிமைகள் ஆணையம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023