NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    எழுதியவர் Nivetha P
    Feb 17, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.

    இங்கு மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் இங்கு தங்கவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    சாலைகளில் திரியும் மனநல பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோரை அழைத்து வந்து சிகிச்சையளித்து அவர்களது குடும்பத்தாருடன் சேர்த்து வைப்பதே இவர்களது பணியாக இருந்துவந்தது என கூறப்படுகிறது.

    இதன் உரிமையாளர் ஜூபின் பேபி(45), கேரளாவை சேர்ந்தவர்.

    இந்நிலையில் இந்த ஆசிரமத்தில் திருப்பூரை சேர்ந்த ஜாபருல்லா என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஒருநாள் அவர் திடீரென மாயமானநிலையில் அவரது உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்கள்.

    இதன்பேரில் துவங்கிய விசாரணையில் இந்த ஆசிரமம் குறித்த பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    9 பேர் கைது

    மீட்கப்பட்டோரில் 60 பேர் வேறு காப்பகங்களில் பத்திரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

    கெடார் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் அங்கு தங்கியிருந்தோரை கட்டிவைத்து சித்திரவதை செய்தல், போதை மருந்து அளித்தல், பெண்களை பலாத்காரம் செய்தல், உள்நோக்கத்துடன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்தல் போன்றவைகள் அரங்கேறியது தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து, அந்த ஆசிரமத்தின் உரிமையாளர், அவரது மனைவி உள்பட மேலும் சில பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்டோரில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் அந்த ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 203 பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்களுள் குணமடைந்த 60 பேர் திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடவேண்டியவை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விழுப்புரம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் போராட்டம்
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு

    தமிழ்நாடு

    சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு சென்னை
    வேலூரில் சிறப்பு தேவை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச முடித்திருத்தம் மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை கன்னியாகுமரி
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025