NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'அம்ரித் பாரத்' திட்டம்: தமிழகத்தில் பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அம்ரித் பாரத்' திட்டம்: தமிழகத்தில் பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
    பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

    'அம்ரித் பாரத்' திட்டம்: தமிழகத்தில் பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

    எழுதியவர் Venkatalakshmi V
    May 22, 2025
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பரங்கிமலை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

    மொத்தம் ரூ.24,470 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள 'அம்ரித் பாரத்' திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக 103 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன.

    தமிழகத்தில் திறக்கப்பட்ட ரயில் நிலையங்கள்:

    பரங்கிமலை

    ஸ்ரீரங்கம்

    போளூர்

    திருவண்ணாமலை

    விருதாச்சலம்

    சாமல்பட்டி

    குழித்துறை

    சிதம்பரம்

    மன்னார்குடி

    வசதிகள்

    ரயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் 

    இந்த புதிய நிலையில், ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக நவீன நுழைவு வாயில்கள், நடை மேம்பாலங்கள், நகரும் படிக்கட்டுகள், லிப்ட், கூடுதல் நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த மேம்பாட்டு பணிகளுடன், தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான ஆந்திராவின் சூலூர்பேட்டை, கேரளாவின் 3 ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மொத்தம் 13 ரயில் நிலையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

    இது தவிர பிற மாநிலங்களில் மேம்படுத்தப்பட்ட நிலையங்கள்:

    உத்தரப்பிரதேசம்-19

    குஜராத்-18

    மகாராஷ்டிரா-15

    மத்தியப் பிரதேசம் - 6

    கர்நாடகா - 5

    சத்தீஸ்கர் - 5

    பீகார் - 2

    கேரளா - 2 உள்ளிட்ட பல மாநிலங்களில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    தமிழ்நாடு
    தமிழகம்
    ரயில் நிலையம்

    சமீபத்திய

    'அம்ரித் பாரத்' திட்டம்: தமிழகத்தில் பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ஜூன் 2025க்குள் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் இயங்காது என அறிவிப்பு; காரணம் என்ன? நெட்ஃபிலிக்ஸ்
    ஒரு சிக்கன் நெக்கில் கைவைத்தால் இரண்டு சிக்கன் நெக் பறிபோகும்; பங்களாதேஷுக்கு அசாம் முதல்வர் எச்சரிக்கை பங்களாதேஷ்
    STR 50: முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு! சிலம்பரசன்

    பிரதமர் மோடி

    நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் அதன் முதல் ரயில் சேவையை பெறவுள்ளது வந்தே பாரத்
    பங்களாதேஷ் தேசிய தினம்; முகமது யூனூஸிற்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் பங்களாதேஷ்
    ஏப்ரல் 6 அன்று பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் பாம்பன் பாலம்
    நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனருக்கு பிரதமர் மோடி அஞ்சலி; தீக்சபூமியில் அம்பேத்கருக்கும் அஞ்சலி செலுத்தினார் நரேந்திர மோடி

    தமிழ்நாடு

    இடி மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் வானிலை ஆய்வு மையம்
    பாராட்டை பெறும் CSK சிவம் துபேவின் உன்னத செயல்; அப்படி என்ன செய்தார்? விளையாட்டு
    யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை: 57 பேர் தேர்ச்சி - 5 ஆண்டுகளில் அதிகம்!  யுபிஎஸ்சி
    மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை

    தமிழகம்

    தமிழகத்தில் 6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு  பள்ளிகளுக்கு விடுமுறை
    கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம் கலைஞர் கருணாநிதி
    தமிழகம் முழுவதும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 15 நாள் கோடை விடுமுறை தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஏப்ரல் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    ரயில் நிலையம்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி  சென்னை
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025