NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை 
    பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை

    பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை 

    எழுதியவர் Nivetha P
    May 18, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை தடுப்பது குறித்த கூட்டம் இன்று(மே.,18)தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளின் செயலாளர்கள் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் தாக்காத வகையில், மனித உடலின் நீர்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீரினை குடிக்க வேண்டும்.

    அவசியமான பணிகளுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது குடிநீரினை கையோடு எடுத்து செல்ல வேண்டும்.

    ஓ.ஆர்.எஸ்., இளநீர், மோர், எலுமிச்சை மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றினை குடிக்க வேண்டும்.

    இந்த பருவ காலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அறிவுரை

    மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 

    மேலும், வெயில் காலங்களில் காலணி அணியாமல் வெறுங்காலுடன் செல்ல கூடாது.

    சிறிய குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் அதிக வெப்பத்தில் மதிய வேளையில் அதாவது 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து தலைமை செயலாளர் பேசுகையில், இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவிரிவான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    அந்த அறிவுரைகள் அனைத்தையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தொகுத்து அனைத்து துறைகளுக்கும் வழங்க வேண்டும்.

    தொடர்ச்சியான ஆய்வுக்கூட்டங்கள் மூலம் இவை பின்பற்றப்படுகின்றனவா என்பதனையும் கண்காணித்திட வேண்டியதன் அவசியத்தையும் தலைமை செயலாளர் இறையன்பு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கர்ப்பிணி பெண்கள்

    சமீபத்திய

    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை
    பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா  பஹல்காம்
    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு

    தமிழ்நாடு

    உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித் பா ரஞ்சித்
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்  காவல்துறை
    தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் பெற்ற மாணவி - 12ம் வகுப்பு சர்ச்சை விவகாரம்  மதுரை
    'மோக்கா' புயல் இன்று மாலை உருவாகும்: வானிலை எச்சரிக்கை  இந்தியா

    கர்ப்பிணி பெண்கள்

    கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!  பயணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025