NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா நிலச்சரிவு: பினராயி விஜயன் vs அமித் ஷா கூறுவது என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளா நிலச்சரிவு: பினராயி விஜயன் vs அமித் ஷா கூறுவது என்ன?
    வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 158 பேர் இறந்துள்ளனர்

    கேரளா நிலச்சரிவு: பினராயி விஜயன் vs அமித் ஷா கூறுவது என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 31, 2024
    07:27 pm

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து மாநில அரசிற்கு முன்கூட்டியே எச்சரித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

    திருவனந்தபுரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன்,"பருவநிலை மாற்றம் தொடர்பான கடுமையான சிக்கல்கள் உள்ளன என்பதை மத்திய அரசும் உணர வேண்டும். கடந்த காலங்களில், இப்போது நாம் பார்ப்பது போல் அதிக மழை பெய்ததை பார்த்திருக்கிறோமா?"

    "நமக்கு காலநிலை மாற்றத்தினை தணிக்கும் முயற்சிகள் தேவை. இது போன்ற ஏதாவது இயற்கை பேரிடர் நடந்தால், நீங்கள் மற்றவர்களின் மீது பழியை சுமத்த முயற்சிக்க கூடாது. நான் சொன்னது போல், இது பழி போடும் நேரம் இல்லை" என்றார்.

    அமித்ஷா

    அமித்ஷா கூறியது என்ன?

    ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த ஜூலை 23 அன்று கேரள அரசுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறினார்.

    "2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசு ரூ.2,000 கோடிக்கு மேல் முன்னெச்சரிக்கை அமைப்பை உருவாக்க செலவிட்டுள்ளது. சம்பவத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்பும், ஜூலை 24-ம் தேதியும் கேரள அரசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்றார்.

    "அதோடு ஜூலை-25, ஜூலை-26 அன்று, 20 செ.மீ.க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரித்தோம்" என்று அமித்ஷா கூறினார்.

    மேலும் ஜூலை 23 அன்று, நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு ஒன்பது NDRF குழுக்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டதாக உள்துறை அமைச்சர் கூறினார்.

    பினராயி விஜயன்

    முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுவது என்ன?

    இது குறித்து பினராயி விஜயன் கூறுகையில், வயநாட்டில் 115-204 மி.மீ மழை பெய்யும் என்று மத்திய அரசின் வானிலை எச்சரிக்கை தெரிவித்தது.

    ஆனால் அடுத்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட அன்று ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

    "சோகம் நிகழும் முன், ஒருமுறை கூட, அப்பகுதியில் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே, அன்று காலை, 6 மணிக்கு, ரெட் அலர்ட் விடுத்தனர்," என்றார்.

    ஜூலை 29 அன்று, இந்திய புவியியல் ஆய்வு மையம், ஜூலை-30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறிய நிலச்சரிவு அல்லது பாறை வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது என்றார் முதல்வர் பினராயி விஜயன்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    நிலச்சரிவு
    பினராயி விஜயன்
    அமித்ஷா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கேரளா

    குருவாயூரில் உள்ள கிருஷ்ணர்  கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு  பிரதமர் மோடி
    மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் புகைப்படங்கள் மலையாள திரையுலகம்
    சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்  கவர்னர்
    நடவடிக்கை எடுக்க கோரி சாலையோரத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கேரள ஆளுநருக்கு Z+ பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு உள்துறை

    நிலச்சரிவு

    ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை  மகாராஷ்டிரா
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம் மகாராஷ்டிரா

    பினராயி விஜயன்

    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர் கேரளா
    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து இந்தியா
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'  கேரளா

    அமித்ஷா

    காஷ்மீர் சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் நவராத்திரி பூஜை - பெருமிதம் கொள்ளும் அமித்ஷா ஜம்மு காஷ்மீர்
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    கேரளாவில் வெடிகுண்டு தாக்குதல்: டிபன் பாக்ஸில் வெடிபொருட்கள் இருந்ததாக தகவல் கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025