NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு
    சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு

    சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Feb 08, 2023
    07:41 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை விமான நிலையத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 பழைய விமானங்களை அகற்ற தனியார் நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அகற்றும் பணி மேற்கொள்வதோடு வரும் பிப்ரவரி 10ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி, VT-KAE(MSN-737), VT-KAF(MSN-738), VT-DKA(MSN-738), VT-DKA(MSN-718)-M-ABFI ஆகிய 3 பதிவு நீக்கம் செய்யப்பட்ட விமானங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே சென்னை விமான நிலையத்தில் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கைவிடப்பட்ட விமானங்களை தற்போதைய உரிமையாளர்கள் பொருந்தக்கூடிய அனைத்து நிலுவை தொகைகளையும் செலுத்தி அவற்றை வரும் 10ம் தேதியன்று அல்லது அதற்கு முன்பாகவோ சென்னை விமான நிலையத்தில் இருந்து அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

    உடனடியாக அகற்ற உத்தரவு

    விமான நிலைய இயக்குநரின் அலுவலகத்திற்கு உரிமையாளர்கள் விசாரணைக்கு வர உத்தரவு

    மேலும் இதனை தொடர்ந்து, ஏஏஐ சட்டம் 1994ன் கீழ் மேற்கூறப்பட்டுள்ள 3 விமானங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது.

    இது குறித்த விசாரணை வரும் 10ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும்.

    விமான நிலைய இயக்குநரின் அலுவலகத்திற்கு உரிமையாளர்கள் விசாரணைக்கு வருமாறும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

    அப்படி இல்லையெனில் நடவடிக்கைகள் எக்ஸ்-பார்ட்டாக நடத்தப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

    பயன்பாட்டில் இல்லாத இந்த 3 பழைய விமானங்களில் பறவைகள் கூடுகட்டி வசித்து வருவதால் விமான போக்குவரத்துக்கு பறவைகள் மூலம் ஆபத்து நேரிட வாய்ப்புகள் உள்ளது.

    இதனால் தான் இந்த 3 பழைய விமானங்களை உடனே விமான நிலையத்தில் இருந்து அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    சென்னை

    சமீபத்திய

    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    சென்னை

    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் மு.க ஸ்டாலின்
    17 சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை பைக்கர்
    புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்! இந்தியா
    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025