
சொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை; தொழில்துறை மாநாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்திய விமானப்படை தளபதி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களில் தொடர்ச்சியான தாமதங்கள் குறித்து விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
பொறுப்பை நிறைவேற்றுதல் மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதற்கான அவசரத் தேவையை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டு வணிக உச்சி மாநாட்டில் பேசிய அமர் ப்ரீத் சிங், "ஒரு திட்டம் கூட சரியான நேரத்தில் முடிக்கப்பட்டாதாக என்னால் நினைக்க முடியவில்லை." என்று கூறினார்.
மேலும், தளவாடங்கள் ஒருபோதும் வழங்கப்படாமல் போகலாம் என்பதை அறிந்திருந்தும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன என்பதை ஒப்புக்கொண்டார்.
தேஜாஸ் எம்கே1ஏ
தேஜாஸ் எம்கே1ஏ ஜெட் போர் விமான டெலிவரி தாமதம்
உள்நாட்டு போர் ஜெட் திட்டத்தில் ஏற்படும் தாமதங்களை எடுத்துக்காட்டிய அமர் ப்ரீத் சிங், ₹48,000 கோடி ஒப்பந்தத்தின் கீழ் தேஜாஸ் எம்கே1ஏ ஜெட் விமானங்களை வழங்குவதில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தாமதமாகி வருவதை சுட்டிக்காட்டினார்.
இதன் முதல் டெலிவரி மார்ச் 2024 இல் திட்டமிடப்பட்டிருந்தாலும், இன்னும் எந்த விமானமும் ஒப்படைக்கப்படவில்லை.
தேஜாஸ் எம்கே2 மற்றும் ஸ்டெல்த் அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராஃப்ட் (AMCA) ஆகியவற்றிற்கான முன்மாதிரி இல்லாததையும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறையில் நம்பிக்கை மற்றும் பொறுப்பின் முக்கியத்துவத்தை அமர் ப்ரீத் சிங் வலியுறுத்தினார்.
இந்தியாவில் வெறுமனே உற்பத்தி செய்வதிலிருந்து முழுமையாக வடிவமைக்கும் அமைப்புகளுக்கு மாற வலியுறுத்தினார்.