NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு 
    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

    மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    May 04, 2023
    12:09 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள், நேற்று(மே 3) இரவு குடிபோதையில் இருந்த காவலர்களால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    மல்யுத்த வீரர்கள் போராட்ட இடத்திற்கு படுக்கைகளை கொண்டு வர முயற்சித்தபோது போலீசார் தங்களை தாக்கியதாக கூறியுள்ளனர்.

    பல மல்யுத்த வீரர்களின் தலையில் தாக்கப்பட்டது. அதில் இருவர் காயம் அடைந்தனர்.

    ஒருவர் மயங்கி விழுந்ததை அடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்தி அனுமதியின்றி படுக்கைகளுடன் போராட்ட இடத்திற்கு வந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதனால், போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ​​ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

    details

    போலீஸ் வன்முறையால் மல்யுத்த வீரர்கள் கலக்கம் 

    தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், குடிபோதையில் மல்யுத்த வீரர்களைத் தாக்கியதாக போராட்டக்காரர்கள் காவல்துறையினரை குற்றம்சாட்டுகின்றனர்.

    "குடிபோதையில் இருந்த போலீஸ்காரர் தர்மேந்திரா, வினேஷ் போகட்டை அடித்துவிட்டு எங்களுடன் தகராறில் ஈடுபட்டார்." என்று முன்னாள் மல்யுத்த வீரர் ராஜ்வீர் கூறியுள்ளார்.

    ஒலிம்பியனும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான கீதா போகட், போலீஸ் வன்முறையால் தனது இளைய சகோதரர் துஷ்யந்த் போகட்டின் தலை உடைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

    ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகட், இப்படி நடத்தப்படுவதற்கு தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று கூறியுள்ளார்.

    மேலும், "நீங்கள் எங்களைக் கொல்ல விரும்பினால், எங்களைக் கொல்லுங்கள்" என்று போகட் அழுதுகொண்டே கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    இந்தியா

    டெல்லி காவல்துறை விசாரணைக்கு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அழைப்பு டெல்லி
    மும்பை கட்டிட விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!  மும்பை
    கிரேட் நிக்கோபார் தீவு திட்டம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அந்தமான் நிக்கோபார்
    'மனதின் குரல்': பில் கேட்ஸ்க்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி  மோடி

    டெல்லி

    இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா
    நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை - இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு இந்தியா

    காவல்துறை

    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது தமிழ்நாடு
    இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது தமிழ்நாடு
    அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர் டெல்லி

    காவல்துறை

    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் சென்னை
    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு இந்தியா
    முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது இந்தியா
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025