NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயர வாய்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயர வாய்ப்பு 
    ஏற்கனவே பெரும்பாலான நகரங்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 200 ரூபாயை தாண்டியுள்ளது.

    தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயர வாய்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 09, 2023
    09:45 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா: சில முக்கிய சந்தைகளில் வெங்காயத்தின் இருப்பு குறைந்து வருவதால், தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும், ஒவ்வொரு வருடமும் இந்த சீசனில் தான் வெங்காயத்தின் விளைச்சலும் விநியோகமும் குறைவாக இருக்கும். அதனால், விரைவில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    அப்படி வெங்காய விலை உயர்ந்தால், அது நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களை கடுமையாக பாதிக்கும்.

    ஏற்கனவே பெரும்பாலான நகரங்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 200 ரூபாயை தாண்டியுள்ளது.

    ஆனால், பிற காய்கறிகளை போல் அல்லாமல், வெங்காயத்தின் விலையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் தகுந்த முயற்சி எடுத்து வருகிறது.

    திஜுவ்

    சேமித்து வைக்கப்பட்ட வெங்காயத்திற்கு நிறைய சேதம் ஏற்பட்டுள்ளது 

    அரசாங்கம் கிட்டத்தட்ட 250,000 டன் வெங்காயத்தை எப்போதும் இருப்பில் வைத்து பராமரித்து வருகிறது.

    ஒருவேளை, சந்தைகளில் வெங்காய விநியோகம் குறைந்து, விலை உயர ஆரம்பித்தால், அரசாங்கத்திடம் இருக்கும் 250,000 டன் வெங்காயம் வெளியிடப்படும்.

    எனினும், இந்திய உணவுகளில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுவது வெங்காயம் என்பதால், அதன் விலை ஏற்றமும் இறக்கமுமாக தான் இருக்கும்.

    இதற்கிடையில், கடந்த சில மாதங்களில் பெய்த கனமழையால், சேமித்து வைக்கப்பட்ட வெங்காயத்திற்கு நிறைய சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    அதனால், வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது என்று வியாபாரிகள் கவலை எழுப்பியுள்ளனர்.

    இந்நிலையில், "வெங்காயத்தின் தேவை மற்றும் விநியோகத்தை அரசாங்கம் கண்காணித்து வருகிறது. சந்தையில் விநியோகம் குறையும் போது அதற்கு தேவையான இருப்புகள் எங்களிடம் உள்ளன." என்று அரசாங்கம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    இந்தியா

    மத்திய பிரதேசம்: குனோ தேசிய பூங்காவில் மீண்டும் ஒரு பெண் சிறுத்தை பலி  மத்திய பிரதேசம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அதிர்ச்சி தகவல் யுஜிசி
    இலவச ஆதார் அப்டேட்டிற்கான காலக்கெடுவை நீட்டித்திருக்கும் UIDAI அமைப்பு ஆதார் புதுப்பிப்பு

    மத்திய அரசு

    வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை இந்தியா
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினந்தோறும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை  ஜம்மு காஷ்மீர்
    இந்த காலகட்டத்திலும் ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படும் இந்தியர்கள்  உலகம்
    அமலாக்கத்துறை தலைவரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அமலாக்க இயக்குநரகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025