NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்!
    பல தலைமுறைகளுக்கு பின் கோவிலுக்குள் சென்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்(Oneindia Tamil)

    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2022
    06:04 pm

    செய்தி முன்னோட்டம்

    பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்த கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, புதுக்கோட்டையில் உள்ள இறையூர் கிராமம் சமதுவத்துவத்தை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்திருக்கிறது.

    புதுக்கோட்டை இறையூர் கிராமக் கோவிலுக்குள் பல தலைமுறைகளாக பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்த தீண்டாமையை ஒழிக்கும் விதமாக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் அந்த ஊர் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றிருக்கின்றனர்.

    "முதல்முறையாக மூன்று ஜாதியினரும் சேர்ந்து பூஜை செய்வதாலும் கலெக்டர் கோவிலுக்குள்ளே எங்களை அழைத்து சென்றதாலும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் உரிமையை மட்டும் தான் கேட்கிறோம், வேறு யாருடைய சொத்தையும் நாங்கள் கேட்கவில்லை," என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் கிராமவாசி லதா.

    பொங்கல்

    சமத்துவ பொங்கல்:

    தேங்காய் உடைத்து ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கோவிலுக்குள் பிரார்த்தனை செய்தனர்.

    கோவிலில் அனைத்து ஜாதியினரும் இணைந்து பூஜை நடத்துவதை உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்தது.

    மேலும், ஊரில் வசிக்கும் மூன்று சமுதாய மக்களும் சமத்துவதுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் வருவாய்த்துறையினரும் ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு மேள தாளத்துடன் மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.

    இந்த விழாவிற்காக கோவில் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டது.

    இதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மாவட்ட செய்திகள்
    பொங்கல்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம் கடன்
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா-சீனா மோதல்
    மார்ச் 2023 இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்: வருமானவரித் துறை பயனர் பாதுகாப்பு

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு

    பொங்கல்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள் ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025