NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு
    ஈபிஎஸ் தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார் - ஓபிஎஸ்

    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 21, 2023
    04:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

    இதில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திமுக சார்பில் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த நிலையில் ஓபிஎஸ் ஏதும் அறிக்கை அளிக்காமல் இருந்தார்.

    இந்நிலையில் அவர் தற்போது, இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க., ஆதரவை கோர அதிமுக முடிவு செய்துள்ளது என்றும்,

    இது குறித்து பா.ஜ.க., தலைவர்களை சென்னையில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

    இரட்டை இலை சின்னத்தை பெற தங்களுக்கு தான் முழு உரிமை உள்ளது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

    இரட்டை இலை சின்னம்

    ஈபிஎஸ் தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட பேச்சுவார்த்தைக்கு தயார் - ஓபிஎஸ்

    மேலும், 'ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். 2026ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் போட்டியிட முழுஉரிமை உள்ளது. இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து கூட்டணி கட்சிகள் தங்களுடன் தொடர்ந்து பேசுவதாகவும், பா.ஜ.க. போட்டியிட விரும்பினால் ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    தொடர்ந்து, பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணையவேண்டும்.

    ஈபிஎஸ் தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இரட்டை இலை சின்னம் முடங்க தான் ஒருபோதும் காரணமாக இருக்கபோவதில்லை என்றும் அவர் உரைத்துள்ளார்.

    இறுதியாக, இடைத்தேர்தலில் தங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா

    எடப்பாடி கே பழனிசாமி

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025