NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு
    இந்தியா

    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு

    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு
    எழுதியவர் Nivetha P
    Jan 21, 2023, 04:22 pm 1 நிமிட வாசிப்பு
    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு
    ஈபிஎஸ் தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார் - ஓபிஎஸ்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக சார்பில் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த நிலையில் ஓபிஎஸ் ஏதும் அறிக்கை அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது, இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க., ஆதரவை கோர அதிமுக முடிவு செய்துள்ளது என்றும், இது குறித்து பா.ஜ.க., தலைவர்களை சென்னையில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற தங்களுக்கு தான் முழு உரிமை உள்ளது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

    ஈபிஎஸ் தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட பேச்சுவார்த்தைக்கு தயார் - ஓபிஎஸ்

    மேலும், 'ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். 2026ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் போட்டியிட முழுஉரிமை உள்ளது. இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கூட்டணி கட்சிகள் தங்களுடன் தொடர்ந்து பேசுவதாகவும், பா.ஜ.க. போட்டியிட விரும்பினால் ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து, பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணையவேண்டும். ஈபிஎஸ் தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் முடங்க தான் ஒருபோதும் காரணமாக இருக்கபோவதில்லை என்றும் அவர் உரைத்துள்ளார். இறுதியாக, இடைத்தேர்தலில் தங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    எடப்பாடி கே பழனிசாமி
    தேர்தல்

    சமீபத்திய

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    எடப்பாடி கே பழனிசாமி

    அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் அதிமுக
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் சென்னை
    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் பட்ஜெட் 2023

    தேர்தல்

    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு இந்தியா
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு ஈரோடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023