NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதானி-ஹிண்டன்பர்க் வழக்கு: செபி விசாரணையை மாற்ற எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதானி-ஹிண்டன்பர்க் வழக்கு: செபி விசாரணையை மாற்ற எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    அதானி-ஹிண்டன்பர்க் வழக்கு: செபி விசாரணையை மாற்ற எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    எழுதியவர் Srinath r
    Jan 03, 2024
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில், பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(செபி) விசாரணையில் தலையிட மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்ற முகாந்திரம் இல்லை என தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பான பல மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், இன்று அதில் நான்கு மனுக்கள் மீது தீர்ப்பளித்துள்ளது.

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

    2nd card

    செபியின் ஒழுங்குமுறை கட்டமைப்புக்குள் நுழைய நீதிமன்றத்திற்கு அதிகாரம் குறைவு

    அந்த தீர்ப்பில், செபியின் ஒழுங்குமுறை கட்டமைப்புக்குள் நுழைய, நீதிமன்றத்திற்கு போதிய அதிகாரம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    "செபியின் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் நுழைவதற்கான இந்த நீதிமன்றத்தின் அதிகாரம் வரம்புக்குட்பட்டது.

    வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு(FPI) மற்றும் பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்(LODR) விதிமுறைகள் மீதான அதன் திருத்தங்களைத் திரும்பப் பெறுவதற்கு செபிக்கு வழிகாட்டுவதற்கு சரியான காரணங்கள் எதுவும் இல்லை. விதிமுறைகள் எந்த குறைபாடுகளாலும் பாதிக்கப்படுவதில்லை" என்று அந்த அமர்வு குறிப்பிட்டது.

    "செபி இது தொடர்பாக 24 புகார்களில் 22ஐ விசாரித்துள்ளது. சொலிசிட்டர் ஜென்ரலின் உத்திரவாதத்தை ஏற்று மீதமுள்ள இரண்டு புகார்களையும் மூன்று மாதங்களில் முடிக்க செபிக்கு உத்தரவிடுகிறோம்" என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

    3rd card

    ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

    அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விஷால் திவாரி, எம்.எல்.சர்மா மற்றும் காங்கிரசைச் சேர்ந்த ஜெயா தாக்கூர் மற்றும் அனாமிகா ஜெய்ஸ்வா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

    அதில் அதானி குழுமம் அதன் பங்கு விலைகளை போலியாக உயர்த்தியதாகவும்,

    கடந்த ஆண்டு ஜனவரி 24 அன்று ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, அந்த குழுமத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 24ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதானி
    அமெரிக்கா
    உச்ச நீதிமன்றம்
    காங்கிரஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அதானி

    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி
    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்
    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள் பங்கு
    ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு வணிகம்

    அமெரிக்கா

    "அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்"- புலம்பெயர்ந்தோர் குறித்து ட்ரம்ப் பேச்சு டொனால்ட் டிரம்ப்
    கனடா மற்றும் அமெரிக்காவின் கொலை குற்றசாட்டுகள் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனத்தின் மீது கார் மோதல் ஜோ பைடன்
    இனி விசாவுக்கு அலைய வேண்டியதில்லை; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்! விசா

    உச்ச நீதிமன்றம்

    'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம் தமிழகம்
    'அரசியல் பழிவாங்கலுக்கு இது நேரமில்லை': டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து  டெல்லி
    நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை: எந்த வகை பட்டாசுகளுக்கும் அனுமதி இல்லையா? தீபாவளி
    மோசமடையும் காற்று மாசு: பிற மாநில டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய தடை  டெல்லி

    காங்கிரஸ்

    'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ்  மகளிர் ஆணையம்
    தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக  தெலுங்கானா
    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ் தெலுங்கானா
    தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை  தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025