Page Loader
இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு
இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,88,916) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு

எழுதியவர் Sindhuja SM
May 26, 2023
01:20 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று(மே-25) 535ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 490 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 5,707ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.01 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,88,916) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,856 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 2 இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

details

கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

இந்தியாவில் மே-24ஆம் தேதி 552 பாதிப்புகளும் மே-23ஆம் தேதி 405 பாதிப்புகளும் மே-22ஆம் தேதி 473 பாதிப்புகளும், மே 21ஆம் தேதி 756 பாதிப்புகளும் மே 20ஆம் தேதி 782 பாதிப்புகளும், மே 19ஆம் தேதி 865 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,51,353ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 949 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா மீட்பு விகிதம் 98.80 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,24,753 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,66,04,252 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,380 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.