NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும்பொழுது கேஸ் பைப்லைன் வெடித்து ஒருவர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும்பொழுது கேஸ் பைப்லைன் வெடித்து ஒருவர் பலி
    சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும்பொழுது கேஸ் பைப்லைன் வெடித்து ஒருவர் பலி

    சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும்பொழுது கேஸ் பைப்லைன் வெடித்து ஒருவர் பலி

    எழுதியவர் Nivetha P
    Nov 10, 2023
    01:28 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை துறைமுகத்தில் உள்ள கோஸ்டல் பர்த் பிளேஸ் என்னும் இடத்தில் ஒடிசா மாநிலத்திலிருந்து எண்ணெய் ஏற்றி செல்லக்கூடிய கப்பல் ஒன்று கடந்த 31ம் தேதி வந்துள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் இந்த கப்பலை பழுது பார்க்கும் பணியில் ராயல் டெக் என்னும் நிறுவனம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    அதன்படி இன்று(நவ.,10) காலை இந்நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் கேஸ் கட்டர் கொண்டு எஞ்சின் பகுதியில் போல்ட் ஒன்றினை அகற்றும் பணியினை செய்து கொண்டிருந்துள்ளார்.

    அப்போது எதிர்பாராவிதமாக கேஸ் பைப்பில் தீப்பொறிப்பட்டு வெடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    விபத்து 

    பலத்த தீக்காயங்களோடு 3 பேர் மருத்துவமனையில் அனுமதி 

    இந்த விபத்தில் தண்டையார்பேட்டை பகுதியினை சேர்ந்த சகாய தங்கராஜ் என்பவர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    மேலும், விபத்து ஏற்பட்ட பகுதியின் அருகே இருந்த காசிமேடு பகுதியினை சேர்ந்த ஜோஸ்வா, ஜீவரத்தினம் நகரை சேர்ந்த புஷ்பலிங்கம், தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்ட 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த சென்னை துறைமுக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இந்த விபத்தால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ஒடிசா
    விபத்து
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சென்னை

    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்  காவல்துறை
    தீபாவளி பண்டிகை - சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது  தீபாவளி
    சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறை
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி  கம்யூனிஸ்ட்

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா

    விபத்து

    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025