NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு கார் பரிசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு கார் பரிசு
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தர்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு கார் பரிசு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 16, 2025
    07:29 pm

    செய்தி முன்னோட்டம்

    பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று (ஜனவரி 16, 2025) மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

    பொங்கல் விழாவின் ஒரு அங்கமான இந்த விழாவை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    முதலில் 10 சுற்றுகளாகத் திட்டமிடப்பட்ட இந்தப் போட்டி, 9 சுற்றுகள் முடிவடைந்த பிறகு போட்டி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இறுதிச் சுற்று முடிவில் அபிசித்தர் 20 காளைகளை அடக்கி வெற்றி பெற்றார். அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.

    இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே 14 மற்றும் 10 காளைகளை அடக்கிய பொதும்பு ஸ்ரீதர் மற்றும் மடப்புரம் விக்னேஷ் ஆகியோர் பெற்றனர்.

    காளைகள்

    சிறந்த காளைகளுக்கு பரிசு

    பொதும்பு ஸ்ரீதருக்கு பரிசாக ஒரு ஆட்டோவையும், விக்னேஷிற்கு பரிசாக ஒரு எலக்ட்ரிக் பைக்கும் வழங்கப்பட்டது. மேலும், சிறந்த காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சிறந்த காளை பிரிவில் முதலிடம் பிடித்த சேலத்தை சேர்ந்த பாகுபலிக்கு டிராக்டரும், இரண்டாவது இடம் பிடித்த வக்கீல் பார்த்தசாரதிக்கு சொந்தமான காளைக்கு டிராக்டரும் வழங்கப்பட்டது.

    தைப்பட்டி கண்ணன் என்பவருக்கு சொந்தமான மூன்றாவது சிறந்த காளைக்கு இ-பைக் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வானது திறமை, வீரம் மற்றும் பாரம்பரியத்தின் அற்புதமான காட்சியாக இருந்தது, காளைகளை அடக்குபவர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் இருவருக்கும் குறிப்பிடத்தக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜல்லிக்கட்டு
    மதுரை
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்
    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது இந்தியா
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsஎஸ்ஆர்எச்: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025

    ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு மாவட்ட செய்திகள்
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  தமிழ்நாடு

    மதுரை

    மதுரை திருமங்கலத்தில் இன்று முழு கடையடைப்பு; எதற்காக? போராட்டம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செங்கோலை கைம்பெண் வாங்ககூடாதா?: மதுரை பெஞ்ச் கேள்வி சித்திரை திருவிழா
    மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ரத்து சித்திரை திருவிழா
    மதுரையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் தேரோட்ட திருவிழா கோலாகலமாக தொடங்கியது  சித்திரை திருவிழா

    தமிழகம்

    சென்னை பரங்கிமலை ரயில் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு; முழு தண்டனை விபரங்கள் மரண தண்டனை
    தமிழகத்தில் அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்; அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளுங்கள் தமிழ்நாடு
    தேசிய வாள்வீச்சு போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் தமிழக வீராங்கனை பவானி தேவி வாள்வீச்சு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    தமிழ்நாடு

    அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000; தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    கோவையில் எல்பிஜி டேங்கர் கவிழ்ந்து விபத்து; எரிவாயு கசிவால் அச்சம்; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் கோவை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு பொங்கல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025