NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED
    இந்தியா

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED
    எழுதியவர் Sindhuja SM
    Feb 03, 2023, 10:54 am 1 நிமிட வாசிப்பு
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய  ஆம் ஆத்மி: ED
    கோவா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த குழுக்களின் தன்னார்வலர்களுக்கு ரூ. 70 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக ED தெரிவித்துள்ளது.

    டெல்லி மதுபான ஊழல் வழக்கில், அமலாக்க இயக்குனரகம்(ED) புதிய குற்றப்பத்திரிகையைத் தயாரித்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்(AAP) தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான வியாபாரியும், Indospiritஇன் நிர்வாக இயக்குநருமான சமீர் மகேந்திருவுடன் வீடியோ காலில் பேசியதாக கூறப்பட்டுள்ளது. அப்படி பேசும் போது ஆம் ஆத்மி தலைவர் விஜய் நாயரின் தொலைபேசியை அவர்கள் பயன்படுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த ஊழல் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் ED குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி லெப்டினன்ட்-கவர்னர் வி.கே.சக்சேனாவின் ஆலோசனையின் பேரில், ஆம் ஆத்மி நிர்வாகம் அதன் மது கொள்கை 2021-22ன் கீழ் மதுபான உரிமங்கள் வழங்குவதில் விதிமீறல்கள் செய்ததாக எழுந்த குற்றசாட்டுகள் குறித்து விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

    நாயர் ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில் ரூ.100 கோடி பெற்றார்: ED

    பாரதிய ஜனதா கட்சி தனது அரசியல் போட்டியாளர்களை துன்புறுத்துவதற்காக விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்று இதற்கு கெஜ்ரிவால் பதிலளித்திருந்தார். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படும் நாயர் கைது செய்யப்பட்ட ஒரு நாளில் மதுபான வியாபாரி மகேந்திருவையும் ED கைது செய்தது. ஆம் ஆத்மியின் தகவல் தொடர்புப் பொறுப்பாளர் நாயர், மதுபான உரிமம் வழங்குவதற்கான முன்பணமாக ரூ.100 கோடி ரூபாய் ஆம் ஆத்மி சார்பில் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணத்தை "தெற்கு குழு" வழங்கியதாகவும் ED கூறியுள்ளது. தெலுங்கானாவின் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதியின்(BRS) கவிதா, ஆந்திராவின் ஆளும் YSR காங்கிரஸின் எம்பியான மகுண்டா ஸ்ரீனிவாசுலுரெட்டி மற்றும் அரபிந்தோ பார்மாவின் சரத்ரெட்டி ஆகியோர் தெற்குக் குழுவில் அடங்குவர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    கோவா
    ஆம் ஆத்மி

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    டெல்லி

    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு இந்தியா
    நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை - இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா
    இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் இந்தியா

    கோவா

    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார் இந்தியா
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் இந்தியா
    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! தொழில்நுட்பம்

    ஆம் ஆத்மி

    மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு டெல்லி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023