NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய  ஆம் ஆத்மி: ED
    கோவா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த குழுக்களின் தன்னார்வலர்களுக்கு ரூ. 70 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக ED தெரிவித்துள்ளது.

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED

    எழுதியவர் Sindhuja SM
    Feb 03, 2023
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மதுபான ஊழல் வழக்கில், அமலாக்க இயக்குனரகம்(ED) புதிய குற்றப்பத்திரிகையைத் தயாரித்துள்ளது.

    அந்த குற்றப்பத்திரிகையில், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்(AAP) தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான வியாபாரியும், Indospiritஇன் நிர்வாக இயக்குநருமான சமீர் மகேந்திருவுடன் வீடியோ காலில் பேசியதாக கூறப்பட்டுள்ளது.

    அப்படி பேசும் போது ஆம் ஆத்மி தலைவர் விஜய் நாயரின் தொலைபேசியை அவர்கள் பயன்படுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த ஊழல் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் ED குற்றம்சாட்டியுள்ளது.

    டெல்லி லெப்டினன்ட்-கவர்னர் வி.கே.சக்சேனாவின் ஆலோசனையின் பேரில், ஆம் ஆத்மி நிர்வாகம் அதன் மது கொள்கை 2021-22ன் கீழ் மதுபான உரிமங்கள் வழங்குவதில் விதிமீறல்கள் செய்ததாக எழுந்த குற்றசாட்டுகள் குறித்து விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

    டெல்லி

    நாயர் ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில் ரூ.100 கோடி பெற்றார்: ED

    பாரதிய ஜனதா கட்சி தனது அரசியல் போட்டியாளர்களை துன்புறுத்துவதற்காக விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்று இதற்கு கெஜ்ரிவால் பதிலளித்திருந்தார்.

    டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படும் நாயர் கைது செய்யப்பட்ட ஒரு நாளில் மதுபான வியாபாரி மகேந்திருவையும் ED கைது செய்தது.

    ஆம் ஆத்மியின் தகவல் தொடர்புப் பொறுப்பாளர் நாயர், மதுபான உரிமம் வழங்குவதற்கான முன்பணமாக ரூ.100 கோடி ரூபாய் ஆம் ஆத்மி சார்பில் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த பணத்தை "தெற்கு குழு" வழங்கியதாகவும் ED கூறியுள்ளது.

    தெலுங்கானாவின் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதியின்(BRS) கவிதா, ஆந்திராவின் ஆளும் YSR காங்கிரஸின் எம்பியான மகுண்டா ஸ்ரீனிவாசுலுரெட்டி மற்றும் அரபிந்தோ பார்மாவின் சரத்ரெட்டி ஆகியோர் தெற்குக் குழுவில் அடங்குவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    Yezdi Roadster v/s Royal Enfield Meteor 350: எந்த பைக் சிறந்தது? பைக் நிறுவனங்கள்
    இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கொரோனா
    மகனுக்கு 'இந்தியா' என பெயர்சூட்டிய பாகிஸ்தான் தம்பதி - வினோத காரணம் பாகிஸ்தான்
    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC பங்குச் சந்தை

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025