NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார் 
    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்

    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார் 

    எழுதியவர் Nivetha P
    Aug 05, 2023
    02:51 pm

    செய்தி முன்னோட்டம்

    2020ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் பொழுது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் மத்திய அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியகம் அமையவுள்ளது.

    ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், தங்க நெற்றி பட்டயம், சங்ககால வாழ்விட பகுதிகள், வெண்கலத்தாலான பொருட்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளது.

    அகழாய்வு பணியின்பொழுது கிடைத்த பொருட்களை காட்சியகப்படுத்தவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது என்னும் பட்சத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(ஆகஸ்ட்.,5) அடிக்கல் நாட்டினார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    அடிக்கல் 

    5 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன அருங்காட்சியகம் 

    ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த அருங்காட்சியக அடிக்கல் நாட்டு நிகழ்வில் எம்.பி.கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதனிடையே அடிக்கல் நாட்டிய பின்னர் நிர்மலாசீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப்பேசியுள்ளார்.

    அவர் பேசுகையில்,"ஆதிச்சநல்லூரில் தொழில்நுட்ப வசதிகள் கொண்டு அதிநவீன அருங்காட்சியகம் அமையவுள்ளது. இங்கு நடத்தப்பட்ட பலதரப்பட்ட அகழாய்வில் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வணிகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது" என்று கூறினார்.

    மேலும் இங்கு மனிதர்கள் உடல்களை புதைத்த இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், அதோடு 3500ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் உபயோகித்த தங்கம், திணை, நெல் உள்ளிட்டவைகளை தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து, இந்த அருங்காட்சியகம் அமைக்க போதுமான நிதியினை மத்திய அரசு எவ்வித தடையுமின்றி வழங்கும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்
    கனிமொழி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு காவல்துறை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    நிர்மலா சீதாராமன்

    மக்களவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது: சபாநாயகர் எச்சரிக்கை! இந்தியா
    10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு இந்தியா
    மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும்-நிர்மலா சீதாராமன் பேச்சு நிர்மலா சீதாராமன்
    மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் பட்ஜெட் 2023
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை பட்ஜெட் 2023
    2023 பட்ஜெட் - உணவு தானியங்கள் இலவசமாக அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு பட்ஜெட் 2023

    கனிமொழி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி  தூத்துக்குடி
    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி கோலிவுட்
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்  கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025