NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்!
    சூப்பர் போலீஸ் ட்ரோன்களை அறிமுகப்படுத்தும் சென்னைக் காவல்துறையினர்(படம்: News 7 Tamil)

    புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 27, 2022
    11:09 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னைக் காவல்துறையினர் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு விதமான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், தற்போது சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த காவல்நிலையத்திற்கு இதுவரை 3 கோடியே 60 லட்ச ரூபாய் தமிழக அரசு சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ட்ரோன் காவல் நிலையத்தை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் அமைத்துள்ளனர்.

    இதற்காக 20 பொறியியல் பட்டதாரிகள் காவலர்களாக நியமிக்கப்பட்டுள்னர்.

    இந்த ட்ரோன் காவல் நிலையத்தில் 9 மேசைகள் அமைக்கபட்டுள்ளன. ஒவ்வொரு மேசையிலும் ஒவ்வொரு விதமான ட்ரோன்கள் கண்காணிக்கப்படும்.

    இதன் மூலம், சென்னையில் மூன்று விதமான மென்பொருட்கள் கொண்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

    இந்த 3 வகையான ட்ரோன்களிலும் மிக தெளிவான கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

    ட்ரோன் தொழில்நுட்பம்

    3 வகையான ட்ரோன்கள்!

    சர்வைலன்ஸ் ட்ரோன்:

    இவை 5கிலோ மீட்டர் சுற்றளவு பறக்கும் சிறிய வகை ட்ரோன்களாகும்.

    முக்கிய தலைவர்கள் வரும்போது சுற்று பகுதிகளைக் கண்காணிப்பதற்கென்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இவை 30 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவை.

    ஏரோபிளேன்-ட்ரோன்:

    இவை 15கிலோ மீட்டர் சுற்றளவு மற்றும் 120மீட்டர் உயரம் பறக்கும் ட்ரோன்களாகும்.

    இவை 45 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது.

    நிறைய மக்கள் கூடியிருக்கும் இடத்தில் அதிக நேரம் கண்காணிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    எடைகளை தூக்கும் ட்ரோன்:

    இந்த ட்ரோன்களால் 15-20கிலோ எடைகளைத் தூக்க முடியும்.

    கடலில் சிக்கி இருப்பவர்களுக்கு உதவி செய்ய, 180-200கிலோ எடைகளைத் தாங்கும் inflatable-lifebuoy இதில் பொருத்தப்பட்டுள்ளது.

    இது வெள்ளம் வரும் காலங்களில் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    இந்தியா

    தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! கொரோனா
    பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி! தமிழ்நாடு
    பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி! வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025