NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்!
    இந்தியா

    புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்!

    புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 27, 2022, 11:09 pm 1 நிமிட வாசிப்பு
    புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்!
    சூப்பர் போலீஸ் ட்ரோன்களை அறிமுகப்படுத்தும் சென்னைக் காவல்துறையினர்(படம்: News 7 Tamil)

    சென்னைக் காவல்துறையினர் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு விதமான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல்நிலையத்திற்கு இதுவரை 3 கோடியே 60 லட்ச ரூபாய் தமிழக அரசு சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் காவல் நிலையத்தை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் அமைத்துள்ளனர். இதற்காக 20 பொறியியல் பட்டதாரிகள் காவலர்களாக நியமிக்கப்பட்டுள்னர். இந்த ட்ரோன் காவல் நிலையத்தில் 9 மேசைகள் அமைக்கபட்டுள்ளன. ஒவ்வொரு மேசையிலும் ஒவ்வொரு விதமான ட்ரோன்கள் கண்காணிக்கப்படும். இதன் மூலம், சென்னையில் மூன்று விதமான மென்பொருட்கள் கொண்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த 3 வகையான ட்ரோன்களிலும் மிக தெளிவான கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

    3 வகையான ட்ரோன்கள்!

    சர்வைலன்ஸ் ட்ரோன்: இவை 5கிலோ மீட்டர் சுற்றளவு பறக்கும் சிறிய வகை ட்ரோன்களாகும். முக்கிய தலைவர்கள் வரும்போது சுற்று பகுதிகளைக் கண்காணிப்பதற்கென்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை 30 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவை. ஏரோபிளேன்-ட்ரோன்: இவை 15கிலோ மீட்டர் சுற்றளவு மற்றும் 120மீட்டர் உயரம் பறக்கும் ட்ரோன்களாகும். இவை 45 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. நிறைய மக்கள் கூடியிருக்கும் இடத்தில் அதிக நேரம் கண்காணிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எடைகளை தூக்கும் ட்ரோன்: இந்த ட்ரோன்களால் 15-20கிலோ எடைகளைத் தூக்க முடியும். கடலில் சிக்கி இருப்பவர்களுக்கு உதவி செய்ய, 180-200கிலோ எடைகளைத் தாங்கும் inflatable-lifebuoy இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது வெள்ளம் வரும் காலங்களில் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    சென்னை

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    சென்னை

    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது சுற்றுலாத்துறை
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு
    தங்கம் விலை இன்று ரூ.160 வரை உயர்வு - இன்றைய நாளின் முழு விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! தங்கம் வெள்ளி விலை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023