NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது
    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது

    எழுதியவர் Nivetha P
    Mar 01, 2023
    09:05 pm
    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது
    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது

    கோவை பொள்ளாச்சியில் மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தலைமையில் போலீசார் இன்று(மார்ச்.,1) அதிகாலை 4.30மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அந்த பக்கமாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்துள்ளார். அவரை மறிக்கமுயன்ற நிலையில் அவர் நிற்காமல் சென்றுள்ளார். அவரை போலீசார் விரட்டிப்பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்கள். அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பதும், அவர் மீது 60க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. திருடிவிட்டு சிறைக்கு செல்வதே இவரது வழக்கமாக இருந்துவந்துள்ளது. பொள்ளாச்சி நெகமம் பகுதியில் நடந்த திருட்டின் வாய்தாவிற்கு ஆஜராவதற்கு இவர் பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். ஆஜரான பின்னர் ஊருக்கு செல்லாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியுள்ளார் என்று கூறப்படுகிறது.

    2/2

    திருட்டு மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த லட்சுமணன்

    பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் அந்த மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த அவர் புளியம்பட்டி அருகே ஒரு கடையை உடைத்து ரூ.1,870 கொள்ளையடித்துள்ளார். மேலும் அங்கிருந்த பூட்டையும், பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் எடுத்துக்கொண்டு மகாலிங்கபுரத்தில் சுற்றி திரியும் பொழுது தான் மகாலிங்கபுரத்தில் போலீசாரிடம் பிடிபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன், பூட்டுகள், திருட பயன்படுத்தப்படும் பொருட்கள், பணம் முதலியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனை தொடர்ந்து, அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோவை
    மாவட்ட செய்திகள்

    கோவை

    கோவைக்கு வந்த மக்னா காட்டு யானை-நொடி பொழுதில் உயிர்தப்பிய வீடியோ காட்சிகள் தமிழ்நாடு
    கோவை ஈஷாவில் 'தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கோலாகல கொண்டாட்டம் ஈஷா யோகா
    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன் தமிழிசை சௌந்தரராஜன்
    'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை இந்தியா

    மாவட்ட செய்திகள்

    மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் மதுரை
    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி தூத்துக்குடி
    மதுரையில் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ் மதுரை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023