NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது
    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது

    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது

    எழுதியவர் Nivetha P
    Mar 01, 2023
    09:05 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை பொள்ளாச்சியில் மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தலைமையில் போலீசார் இன்று(மார்ச்.,1) அதிகாலை 4.30மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    அப்போது அந்த பக்கமாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்துள்ளார்.

    அவரை மறிக்கமுயன்ற நிலையில் அவர் நிற்காமல் சென்றுள்ளார்.

    அவரை போலீசார் விரட்டிப்பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்கள்.

    அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பதும், அவர் மீது 60க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

    திருடிவிட்டு சிறைக்கு செல்வதே இவரது வழக்கமாக இருந்துவந்துள்ளது.

    பொள்ளாச்சி நெகமம் பகுதியில் நடந்த திருட்டின் வாய்தாவிற்கு ஆஜராவதற்கு இவர் பொள்ளாச்சிக்கு வந்துள்ளார்.

    ஆஜரான பின்னர் ஊருக்கு செல்லாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியுள்ளார் என்று கூறப்படுகிறது.

    போலீசார் கைது நடவடிக்கை

    திருட்டு மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த லட்சுமணன்

    பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் அந்த மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த அவர் புளியம்பட்டி அருகே ஒரு கடையை உடைத்து ரூ.1,870 கொள்ளையடித்துள்ளார்.

    மேலும் அங்கிருந்த பூட்டையும், பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் எடுத்துக்கொண்டு மகாலிங்கபுரத்தில் சுற்றி திரியும் பொழுது தான் மகாலிங்கபுரத்தில் போலீசாரிடம் பிடிபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன், பூட்டுகள், திருட பயன்படுத்தப்படும் பொருட்கள், பணம் முதலியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனை தொடர்ந்து, அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    மாவட்ட செய்திகள்

    பட்டியலின இளைஞரை தகாத வார்த்தைகளில் பேசிய திமுக பஞ்சாயத்து தலைவர் கைது தமிழ்நாடு
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் ஈரோடு
    ரயிலில் வேலூர் செல்லும் தமிழக முதல்வர்-'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம் துவக்கி வைப்பு மு.க.ஸ்டாலின்
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025