NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகள் விற்ற கும்பல் பிடிபட்டது! 10 பேர் கைது! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகள் விற்ற கும்பல் பிடிபட்டது! 10 பேர் கைது! 
    தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகள்

    தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகள் விற்ற கும்பல் பிடிபட்டது! 10 பேர் கைது! 

    எழுதியவர் Arul Jothe
    May 16, 2023
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    IFSO நிறுவனம், பிரபல நிறுவனங்கள் மூலம் போலி ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்த மோசடி கும்பலை பிடித்துள்ளது. இதில் 10 பேரை கைது செய்துள்ளது.

    காவல்துறையின் கூற்றுப்படி, ஒரு தனியார் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் மேலாளர், ஐஎஃப்எஸ்ஓவிடம் புகார் அளித்தபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

    அதில் "போலி, தவறான முத்திரை மற்றும் கலப்படம் செய்யப்பட்ட மருந்துகள்" குறித்து கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மருந்துகள் சில தெரியாத நபர்களால் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

    இந்த அறியப்படாத நபர்கள் தங்களை UMPL இன் ஊழியர்களாகப் பிரதிநிதித்துவப்படுத்தி வெவ்வேறு மொபைல் எண்களில் அழைத்து, தள்ளுபடி விலையில் மருந்துகளை விற்பனை செய்து ஏமாற்றியுள்ளனர்.

    Ayurvedic Medicines

    தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகள்

    2017-ம் ஆண்டு முதல் 6,372 வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்தது நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

    ஹெல்த் நிறுவனத்திடம் இருந்து ரூ.1.94 கோடி மோசடி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் குற்றவாளி ராகுல் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார் & தலைமறைவாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

    உகர்சென், சமர் சிங் மற்றும் ஜிதேந்தர் சிங் ஆகியோர் மற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து போலி அழைப்பு மையத்தை நடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    சம்மந்தப்பட்ட 3 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்ட 10 பேரை தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகளுடன் கைது செய்தது.

    42 மொபைல் போன்கள், 7 மடிக்கணினிகள், ஆயுர்வேத மருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆயுர்வேதம்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    ஆயுர்வேதம்

    மருத்துவ குணங்கள் நிரம்பிய சந்தனத்தை உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஆயுர்வேத மருந்து
    ஆயுர்வேத முறைப்படி, தினமும் ஆயில் புல்லிங் செய்யும் நடிகை அதிதி ராவ் ஆயுர்வேத குறிப்புகள்
    மருத்துவம்: ஆயுர்வேதமும், அதை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும் ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025