NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள்
    74வது குடியரசு தினம்-கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள்

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள்

    எழுதியவர் Nivetha P
    Jan 26, 2023
    12:23 pm

    செய்தி முன்னோட்டம்

    74வது குடியரசு தினமான இன்று டெல்லியில் சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதன்முறையாக நடைபெற்றது.

    காலை 10.30 மணிக்கு துவங்கும் இந்த அணிவகுப்புகள் இந்திய ராணுவ பலம் மற்றும் பாரம்பரிய கலாச்சார பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும். இந்நிகழ்ச்சிக்கு 6000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

    இந்த அணிவகுப்பில் முதலில் எகிப்திய ஆயுத படைகளின் 144 வீரர்கள் கொண்ட ஒருங்கிணைந்த இசைக்குழு மற்றும் அணிவகுப்பு குழு பங்கேற்கிறது.

    தொடர்ந்து 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதேசங்களிலுருந்தும், ஆறு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலிருந்து வளர்ந்து வரும் உள்நாட்டு திறன்கள், கலாச்சார பாரம்பரியம், பொருளாதாரம், பெண்களின் சக்தி ஆகியவை கொண்டு 'புதிய இந்தியா' உருவாவதை சித்தரிக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு இடம்பெறும்.

    3500 ஆளில்லா விமானங்கள்

    'ப்ளைபாஸ்ட்' நிகழ்ச்சியில் முதன்முறையாக 9 ரஃபேல் போர் விமானங்கள்

    கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் தலைமையில் அணிவகுப்புகள் நடைபெறும்.

    'வந்தே பாரதம்' நடனப்போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 479 கலைஞர்கள் கொண்டு கலாச்சார நிகழ்ச்சிகள், கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் டேர் டெவில்ஸ் குழுவின் இருசக்கரவாகன நிகழ்ச்சி ஆகியன நடைபெறும்.

    மேலும் ப்ளைபாஸ்ட் நிகழ்ச்சியில் முப்படை விமானங்கள் பங்கேற்கும்.

    9 ரஃபேல் போர் விமானங்கள் ப்ளைபாஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

    ஜனவரி 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளுடன் துவங்கிய குடியரசு தின விழா, ஜனவரி 29ம் தேதி பாரம்பரிய 'பீட்டிங் தி ரிட்ரீட்' விழாவுடன் முடிவடையவுள்ளது.

    தொடர்ந்து, நிகழ்ச்சியின் பொழுது ரைசினா மலைகள் மீது 3500 உள்நாட்டு ஆளில்லா விமானங்கள் அடங்கிய மிகப்பெரிய ஆளில்லா விமானங்கள் வானத்தில் மின்னும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குடியரசு தினம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    குடியரசு தினம்

    குடியரசு தின விழா 2023: டெல்லியில் நடைபெறப்போகும் 'R-Day Parade','The Beating Retreat' விழா பற்றி தகவல்கள் இந்தியா
    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர் மெரினா கடற்கரை
    குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு காவல்துறை
    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025