NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேஜஸ்வி யாதவ் வீட்டில் சோதனை: ₹70 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்க நகைகள் சிக்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேஜஸ்வி யாதவ் வீட்டில் சோதனை: ₹70 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்க நகைகள் சிக்கியது
    70 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.5 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்க கட்டிகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் சிக்கியுள்ளது

    தேஜஸ்வி யாதவ் வீட்டில் சோதனை: ₹70 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்க நகைகள் சிக்கியது

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2023
    02:07 pm

    செய்தி முன்னோட்டம்

    லாலு பிரசாத் யாதவின் மகள்கள் மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் வீடுகளில் இருந்து 70 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.5 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்க கட்டிகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் உட்பட வெளிநாட்டு கரன்சிகளை அமலாக்க இயக்குனரகம்(ED) நேற்று(மார் 10) கைப்பற்றியது.

    டெல்லியில் உள்ள பீகார் துணை முதல்வரின் வீடு உட்பட தேசிய தலைநகர் மண்டலம்(என்சிஆர்), பாட்னா, ராஞ்சி மற்றும் மும்பை ஆகிய 24 இடங்களில் ED சோதனை நடத்தியது.

    லாலுவின் மூன்று மகள்கள் ராகினி, சந்தா, ஹேமா யாதவ் மற்றும் லாலுவுக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் முன்னாள் ஆர்ஜேடி எம்எல்ஏ அபு டோஜானா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்தியா

    குற்றச்சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த தேஜஸ்வியின் வீடு

    காஜியாபாத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தலைவர் ஜிதேந்திர யாதவ் வீட்டிலும் ED சோதனை நடத்தியது. ஜிதேந்திர யாதவ் ராகினியின் கணவராவார்.

    டெல்லியில் உள்ள நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனியில் சோதனை நடத்தப்பட்டதாகவும், தேஜஸ்வி இருந்த வீடு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏகே இன்ஃபோசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரயில்வேயில் வேலை கிடைத்ததற்கு லஞ்சம் கொடுத்தவர்கள், ஒரு நிலத்தை ஏகே இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது .

    எனவே வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நிறுவனத்தோடு தேஜஸ்விக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதே வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் லாலு மற்றும் அவரது மனைவியிடம் சமீபத்தில் தான் சிபிஐ விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    இந்தியா

    சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை டெல்லி
    மீண்டு வரும் அதானி குழுமம் - ரூ.7374 கோடி கடன்கள் அடைப்பு! தொழில்நுட்பம்
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    இந்திய பெண் உரிமை சட்டங்களின் பட்டியல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025