NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

    சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 30, 2024
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பெண் உறுப்பினர்கள் உட்பட குறைந்தது ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏகே 47 உட்பட ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்) ஆகியவற்றின் கூட்டு பாதுகாப்புக் குழுவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே இன்று காலை 6 மணியளவில் ஒரு காட்டில்சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாராயண்பூர் மற்றும் கான்கேர் எல்லைப் பகுதியின் அபுஜ்மரில் மாவோயிஸ்ட் என்கவுன்டருக்காக பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை புறப்பட்டனர்.

    இந்தியா 

    ஒரு ஏகே 47 உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் 

    "டெக்மேட்டா மற்றும் காகூர் கிராமத்திற்கு இடையே உள்ள காட்டில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஒரு என்கவுன்டர் நடந்தது. சம்பவ இடத்தைத் தேடும் போது, ​​இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் உட்பட மொத்தம் ஏழு மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன." என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

    மாவோயிஸ்ட் முகாமில் இருந்து ஒரு ஏகே 47 உட்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினார்.

    இந்த மாத தொடக்கத்தில், சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மூத்த கிளர்ச்சித் தலைவர் சங்கர் ராவ் உட்பட 29 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் கொன்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சத்தீஸ்கர்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    சத்தீஸ்கர்

    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன? இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025