NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டவிரோதமாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டவிரோதமாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி 

    சட்டவிரோதமாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 07, 2024
    10:32 am

    செய்தி முன்னோட்டம்

    குஜராத்தின் சூரத்தில் நேற்று ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில், அந்த இடத்தில் இருந்து குறைந்தது ஏழு உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

    நேற்று மதியம் நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்பதற்கான பணி இன்னும் நடந்து வருகிறது.

    "இரவு முழுவதும் தேடுதல் பணி தொடர்ந்தது. ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன" என்று சூரத்தின் தலைமை தீயணைப்பு அதிகாரி பசந்த் பரீக் உறுதிப்படுத்தினார்.

    மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவற்றின் குழுக்களால் அந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் ஆறு முதல் ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்தியா 

    கிட்டத்தட்ட ஐந்து பேர் இன்னும் உள்ளே சிக்கியிருக்கலாம்

    மீட்புப் பணிகளை மேற்பார்வையிட சம்பவ இடத்திற்கு சூரத் காவல்துறை ஆணையர் அனுபம் சிங் கெலாட் வந்துள்ளார்.

    மேலும், மீட்புப் பணிகளின் தொடக்கத்தில் சிக்கியவர்களின் குரல்கள் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இடிந்து விழுந்த கட்டிடம் 2017ல் கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    முதற்கட்ட தகவலின்படி, அந்த கட்டிடத்தில் உள்ள ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகளில், பெரும்பாலும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் வாழ்ந்து வந்தனர்.

    "மீட்புப் பணி தொடங்கியபோது, ​​உள்ளே சிக்கியவர்களின் குரல்கள் கேட்டன. இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். கிட்டத்தட்ட ஐந்து பேர் இன்னும் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்," என்று கெலாட் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    குஜராத்

    உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை தமிழ்நாடு
    பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்: குஜராத்தில் பரிதாபம்  தற்கொலை
    'முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு': மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்  கொரோனா
    மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல் கைது

    இந்தியா

    லடாக்: திடீர் வெள்ளத்தால் டேங்க்கிற்குள் இருந்த 5 ராணுவ வீரர்கள் பலி லடாக்
    பலத்த மழை காரணமாக ராஜ்கோட் விமான நிலைய முனையத்தின் கூரை உடைந்து விழுந்தது குஜராத்
    ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    30வது இந்திய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பதவியேற்றார் இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025