NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நீதித்துறைக்கு அரசியல் அழுத்த அச்சுறுத்தல்: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீதித்துறைக்கு அரசியல் அழுத்த அச்சுறுத்தல்: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்
    நீதித்துறை முடிவுகளை பாதிக்கும் வகையில் அழுத்தம் தரும் தந்திரங்களை அந்த குழு பயன்படுத்துவதாக வழக்கறிஞர்கள் கடிதம்

    நீதித்துறைக்கு அரசியல் அழுத்த அச்சுறுத்தல்: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 28, 2024
    02:59 pm

    செய்தி முன்னோட்டம்

    சுமார் 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், நீதித்துறை முடிவுகளை, குறிப்பாக அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், ஒரு அரசியல் அழுத்தம் தங்களை அச்சுறுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.

    மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே மற்றும் பிங்கி ஆனந்த் உட்பட இந்தியாவில் உள்ள 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எழுதிய கடிதத்தில், நீதித்துறையில் செல்வாக்கு செலுத்த, ஆதிக்கம் செலுத்த நடைபெறும் முயற்சிகள் குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

    குறிப்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், நீதித்துறை முடிவுகளை பாதிக்கும் வகையில் அழுத்தம் தரும் தந்திரங்களை அந்த குழு பயன்படுத்துவதாக வழக்கறிஞர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

    நீதித்துறைக்கு அச்சுறுத்தல்

    வழக்கறிஞர்கள் கடிதம் 

    'நீதித்துறைக்கு அச்சுறுத்தல்' என்ற தலைப்பின் கீழ், "இந்த நடவடிக்கைகள் ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் நீதித்துறை செயல்முறைகளில் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கும் கணிசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன" என்று வழக்கறிஞர்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்தனர்.

    தற்போதைய நடைமுறைகளை இழிவுபடுத்தும் முயற்சியிலும், நீதிமன்றங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியிலும் "இக்குழு" நீதித்துறையின் "பொற்காலம்" என்று அழைக்கப்படும் தவறான கதைகளைப் பிரச்சாரம் செய்வதாக வழக்கறிஞர்கள் கூறினர்.

    "சில வழக்கறிஞர்கள், பகலில் அரசியல்வாதிகளுக்காக வாதாடுவதும், பின்னர் இரவில் ஊடகங்கள் மூலம் நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதை பார்க்கும்போது, கவலை அளிக்கிறது" என்று தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    உச்ச நீதிமன்றம்

    கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு ஹேமந்த் சோரன்
    "ஜனநாயகத்தின் கொலை": சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு சண்டிகர்
    உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் உத்தரகாண்ட்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல் பத்திரங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025