NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள்
    கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள்

    கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள்

    எழுதியவர் Nivetha P
    Feb 21, 2023
    06:57 pm

    செய்தி முன்னோட்டம்

    கரூர் மாவட்டம் அருகேவுள்ள அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து என்னும் விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாக கடந்த 19ம் தேதி கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் வனத்துறையின் உதவியோடு கூண்டுகள் வைத்து சிசிடிவி கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    எனினும், இந்நிலையில் தென்னிலை அருகே உள்ள விவசாயி சிதம்பரம் என்பவரது தோட்டத்தில் 6 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததால் பலியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள்.

    அதற்கேற்றாற்போல் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், நொய்யல் பகுதியிலிருந்து சிறுத்தை 20கி.மீ., கடந்து தென்னிலை பகுதியில் நடமாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    வெறிநாய் கடி

    இறந்த கால்நடைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள்

    இதனை தொடர்ந்து, கரூர் மாவட்ட தலைமை வன அலுவலர் சரவணன் தலைமையில் வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.

    பின்னர் இறந்த கால்நடைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், வெறி நாய் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

    எனினும் அப்பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் ஆடுகள் இறந்த செய்திகள் பரவியதால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் சிறுத்தை புலியை பிடிக்கும் நடவடிக்கையில் தோல்வியடைந்த வனத்துறையினர், தற்போது கரூர் மாவட்டத்தில் உள்ள சிறுத்தை புலியினை பிடிக்கும் நடவடிக்கையிலும் பின்னடைவினை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு விழுப்புரம்
    தங்கம் விலை சவரனுக்கு ரூ,720 சரிவு - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் பதிவு செய்த ரவுடி கும்பல் கோவை
    பாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம் கர்நாடகா

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025