NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள்
    கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள்
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள்

    எழுதியவர் Nivetha P
    Feb 21, 2023
    06:57 pm
    கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள்
    கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள்

    கரூர் மாவட்டம் அருகேவுள்ள அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து என்னும் விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாக கடந்த 19ம் தேதி கண்டறியப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் வனத்துறையின் உதவியோடு கூண்டுகள் வைத்து சிசிடிவி கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். எனினும், இந்நிலையில் தென்னிலை அருகே உள்ள விவசாயி சிதம்பரம் என்பவரது தோட்டத்தில் 6 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததால் பலியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். அதற்கேற்றாற்போல் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், நொய்யல் பகுதியிலிருந்து சிறுத்தை 20கி.மீ., கடந்து தென்னிலை பகுதியில் நடமாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    2/2

    இறந்த கால்நடைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள்

    இதனை தொடர்ந்து, கரூர் மாவட்ட தலைமை வன அலுவலர் சரவணன் தலைமையில் வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். பின்னர் இறந்த கால்நடைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், வெறி நாய் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என கூறியுள்ளனர். எனினும் அப்பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் ஆடுகள் இறந்த செய்திகள் பரவியதால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் சிறுத்தை புலியை பிடிக்கும் நடவடிக்கையில் தோல்வியடைந்த வனத்துறையினர், தற்போது கரூர் மாவட்டத்தில் உள்ள சிறுத்தை புலியினை பிடிக்கும் நடவடிக்கையிலும் பின்னடைவினை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா அரசியல் நிகழ்வு
    தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை சென்னை
    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ ஜல்லிக்கட்டு

    மாவட்ட செய்திகள்

    சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை சென்னை
    கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள் கன்னியாகுமாரி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல் திருவண்ணாமலை
    திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023