NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் எடுக்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் எடுக்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்
    புதன்கிழமை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்

    திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் எடுக்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 09, 2025
    07:55 am

    செய்தி முன்னோட்டம்

    திருப்பதியில் உள்ள வைகுண்ட துவார தரிசன டிக்கெட் மையம் அருகே புதன்கிழமை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

    TTD ஏற்பாட்டில், வைகுண்ட ஏகாதசி மற்றும் வைகுண்ட துவார தரிசனம் ஜனவரி 10 முதல் ஜனவரி 19 வரை திட்டமிடப்பட்டுள்ளது.

    10 நாள் சிறப்பு தரிசனத்துக்கான டோக்கன் பெறுவதற்காக 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியதில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    அதன் காரணமாக ஏற்பட்ட தள்ளுமுள்ளில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இச்சம்பவம் குறித்து பதிலளித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இரங்கல் 

    சம்பவ இடத்திற்கு விரையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு

    விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் நாயுடு பேசினார். காயமடைந்தவர்களை சந்திக்க முதல்வர் இன்று திருப்பதி செல்கிறார்.

    சம்பவம் நடந்த TTD டோக்கன் கவுண்டர்களின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பையும் அவர் ஆய்வு செய்வார்.

    இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வெங்கடேஸ்வர் மற்றும் ஜே.சி.சுபம் பன்சால் ஆகியோர் உடனடியாக காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ரூயா மருத்துவமனைக்கு வந்து, நிலைமையை ஆய்வு செய்து, காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.

    திருப்பதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    ஆந்திரா
    சந்திரபாபு நாயுடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    திருப்பதி

    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் சென்னை
    திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை ஆந்திரா
    திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம் ஆந்திரா
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  காவல்துறை

    ஆந்திரா

    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு  பாஜக
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தொடர் முன்னிலை சட்டமன்றம்
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெற்றி சட்டமன்றம்
    ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சந்திரபாபு நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்த விஜய் விஜய்

    சந்திரபாபு நாயுடு

    ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி  ஆந்திரா
    குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி  ஆந்திரா
    பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்? காங்கிரஸ்
    ஆட்சி அமைக்க போவது யார்: கிங் மேக்கர்களாக உருவெடுக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025