NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 புதிய நாடுகள் - பிரதமர் மோடி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 புதிய நாடுகள் - பிரதமர் மோடி அறிவிப்பு
    பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 புதிய நாடுகள் - பிரதமர் மோடி அறிவிப்பு

    பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 புதிய நாடுகள் - பிரதமர் மோடி அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Aug 24, 2023
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு கடந்த 2010ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும்.

    அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்டின் தலைவர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம்.

    2019ம் ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த இம்மாநாடு இந்தாண்டு நேரடியாக நடைபெறுகிறது.

    அதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தென்-ஆப்பரிக்காவில் இந்த மாநாடு துவங்கி நடந்து வருகிறது.

    இதில் இந்திய பிரதமர் மோடி கலந்துக்கொண்டுள்ளார்.

    இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகம், பொது நாணயம் உள்ளிட்டவை குறித்த பேச்சுவார்த்தை நடந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    புது நாடுகள் 

    6 நாடுகள் வரும் ஜனவரி.1ம் தேதி 2024ம் ஆண்டு இணைக்கப்படவுள்ளது 

    மேலும் இந்த மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பினை விரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனை நடந்துள்ளது என்றும் தெரிகிறது.

    இதனிடையே, இந்த அமைப்பில் இணைய 23 நாடுகள் விண்ணப்பித்துள்ளது என்று கூறப்படுகிறது.

    அது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, இந்த மாநாட்டின் முடிவில் 6 புதிய நாடுகள் 'பிரிக்ஸ்' கூட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது என்றும், இதனடிப்படையில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 5ல் இருந்து 11ஆக உயரவுள்ளது என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    அதேபோல் புதிதாக இந்த அமைப்பில் சவுதி அரேபியா, எகிப்து நாடுகள், அர்ஜென்டினா, இரான், எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 6 நாடுகள் வரும் ஜனவரி.1ம் தேதி 2024ம் ஆண்டு இணையவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரிக்ஸ்
    பிரதமர் மோடி
    கொரோனா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிரிக்ஸ்

    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி இந்தியா

    பிரதமர் மோடி

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது காங்கிரஸ் காங்கிரஸ்
    உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி பிரதமர்
    மணிப்பூர் விவகாரம் - கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்  மணிப்பூர்
    பாஜக மீண்டும் 2024ல் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருக்காது - மு.க.ஸ்டாலின் பேச்சு  மு.க ஸ்டாலின்

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 46 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 52 புதிய பாதிப்புகள்  இந்தியா
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 54 புதிய பாதிப்புகள்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025