நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியில் நிலஅதிர்வு
நேபாளம்-இந்திய எல்லை அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள் டெல்லி வரை எதிரொலித்தது. நேபாளத்தில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாடிங்கில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.ம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. பாக்மதி மற்றும் கண்டகி மாகாணங்களின் பிற மாவட்டங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டது.