NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரில் ராணுவ டிரக் மீது கிரெனெட் தாக்குதல், 5 ராணுவ வீரர்கள் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரில் ராணுவ டிரக் மீது கிரெனெட் தாக்குதல், 5 ராணுவ வீரர்கள் பலி
    தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் BSF வீரர்கள்

    ஜம்மு காஷ்மீரில் ராணுவ டிரக் மீது கிரெனெட் தாக்குதல், 5 ராணுவ வீரர்கள் பலி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 09, 2024
    09:23 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் மச்சேடி பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு என்கவுன்டர்களில் ஆறு பயங்கரவாதிகள் மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    கதுவாவில் இருந்து 150 கிமீ தொலைவில் ராணுவ வாகனங்கள் மச்செடி-கிண்ட்லி-மல்ஹர் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

    காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 48 மணி நேரத்தில் ஜம்மு பகுதியில், இந்திய ராணுவம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

    தகவல்கள் 

    அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் 

    தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அதிநவீன ஆயுதங்களை (M4 கார்பைன் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள்) பயன்படுத்தி உயிரிழப்புகளை அதிகப்படுத்தியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    தாக்குதல் நடந்த பத்னோட்டா கிராமத்தில் சரியான சாலை இணைப்பு இல்லை என்றும், வாகனங்கள் மணிக்கு 10-15 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியாது. ராணுவ வாகனங்கள் மிக மெதுவாக சென்றதால், பயங்கரவாதிகள் நிலப்பரப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.

    2-3 பயங்கரவாதிகளும் 1-2 உள்ளூர் வழிகாட்டிகளும் மலைகளின் மேல் நின்று தாக்குதல் நடத்தியதகவும்,முதலில் ராணுவ வாகனங்கள் மீது கையெறி குண்டுகளை வீசி, பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    முந்தைய தாக்குதல்களைப் போலவே வாகனத்தின் ஓட்டுனரே முதல் இலக்கு என்று இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவித்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    இந்திய ராணுவம்
    தீவிரவாதிகள்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு&காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 3 வீரர்கள் பலி துப்பாக்கி சூடு
    பூஞ்ச் ​​தாக்குதல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பயன்படுத்திய பயங்கரவாதிகள் அமெரிக்கா
    பூஞ்ச் ​​தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக மொபைல் இன்டர்நெட் முடக்கம் இந்திய ராணுவம்
    ஜம்மு காஷ்மீர்: மசூதியில் வைத்து ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரி சுட்டு கொலை  காவல்துறை

    இந்திய ராணுவம்

    ராணுவம் To பாரா விளையாட்டு; கண்ணிவெடியில் காலை இழந்த ராணுவ வீரரின் சக்ஸஸ் ஸ்டோரி ஆசிய விளையாட்டுப் போட்டி
    அஜித்தின் தக்‌ஷா குழுவுக்கு கிடைத்த பெருமிதம்; இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் தயாரிக்க வாய்ப்பு நடிகர் அஜித்
    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-கல்வி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு  இந்தியா
    'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங்

    தீவிரவாதிகள்

    தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம்- பிரதமர் மோடி தீவிரவாதம்
    இஸ்ரேலின் 'அயன் டோம்' அமைப்பை ஹமாஸ் எவ்வாறு ஊடுருவியது?  தீவிரவாதம்
    ஜெர்மனியப் பெண்ணின் உடலை மானபங்கப்படுத்திய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் வைரல் செய்தி
    ஜெருசலம் பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் இஸ்ரேல்

    பயங்கரவாதம்

    இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    ரஜோரி மோதல்- வெடிகுண்டு நிபுணர் உட்பட இரண்டு தீவிரவாதிகள் கொலை, 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் ஜம்மு காஷ்மீர்
    ராணுவ தளங்கள் மற்றும் இரண்டு முக்கிய நகரங்கள் மீது நடத்தப்பட இருந்த IS தாக்குதல் முறியடிப்பு தீவிரவாதம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025