NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு 
    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு

    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு 

    எழுதியவர் Nivetha P
    Apr 17, 2023
    12:41 pm

    செய்தி முன்னோட்டம்

    ஊட்டி-நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேவுள்ள மேடநாடு பகுதியில் அமைந்துள்ளது காப்புக்காடு.

    இப்பகுதி ஓங்கி உயர்ந்த மரங்கள், பசுமையினை போர்த்தியதுபோல் தேயிலைத்தோட்டங்கள் என மிக எழில்மிகு இடமாக காட்சியளிக்கும்.

    இந்த மேடநாடு வனப்பகுதியில் காட்டுயானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள் போன்ற வன விலங்குகளும், இருவாச்சி என்னும் அரியவகை பறவை இனங்களும் வசித்து வருகிறது.

    இதனால் இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் அமைச்சர் ஒருவரின் மருமகனுக்கு 100 ஏக்கரில் தேயிலைத்தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்திற்கு செல்ல வனப்பகுதி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறியப்பாதையினை அனுமதிப்பெற்று அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் திடீரென கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சாலையினை விரிவுபடுத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் நேரில்சென்று ஆய்வு செய்துள்ளனர்.

    வனப்பகுதி

    விளக்கம் கேட்டு தோட்ட உரிமையாளருக்கு நோட்டீஸ்

    அப்பொழுது ஏராளமான அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் முதலியன அழிக்கப்பட்டு சுமார் 4 கி.மீ., தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டிருந்ததும்,

    அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் தனியார் தன்வசப்படுத்தி கேட் அமைக்கப்பட்டிருந்தமும் தெரியவந்துள்ளது.

    இதனால் வனத்துறையினர் அந்த எஸ்டேட் மேலாளர் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ரோடு ரோலர், ஜேசிபி வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    மேலும் இது குறித்து விளக்கம் கேட்டு தோட்ட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மலைப்பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்னும் கடுமையான உத்தரவு உள்ள நிலையில், எப்படி ரோடு ரோலர் போன்ற வாகனங்கள் வனத்துறையினருக்கு தெரியாமல் உள்ளே நுழைந்தது என்று இயற்கை ஆர்வலர்கள் பல கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஊட்டி
    ஊட்டி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஊட்டி

    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஊட்டி
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி

    ஊட்டி

    ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர் கவர்னர்
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்: வானிலை அறிக்கை  வானிலை அறிக்கை
    கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி கேரளா
    தமிழகத்தில் சிறைவாசிகள் காணொளி மூலம் பேச ஏற்பாடு - அமைச்சர் அறிவிப்பு சட்டமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025