NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் மீட்பு; மீதமுள்ள 8 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் மீட்பு; மீதமுள்ள 8 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்
    னிச்சரிவில் சிக்கிய 47 பேர் மீட்பு

    உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் மீட்பு; மீதமுள்ள 8 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 01, 2025
    01:07 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் உள்ள மனா கிராமத்திற்கு அருகே உள்ள உயரமான எல்லை சாலைகள் அமைப்பின் (BRO) முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவிக்கும் 55 தொழிலாளர்களில் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள எட்டு பேரைக் காப்பாற்ற இந்திய ராணுவமும், மீட்புக் குழுவும், கடுமையான பனிப்பொழிவுடனும், நேரத்துடனும் போராடி வருகின்றனர்.

    2 ஆம் நாள் தேடுதல் நடவடிக்கையை மீண்டும் தொடங்கிய இந்திய ராணுவம், மேலும் 14 பணியாளர்கள் மீட்கப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள மூன்று பணியாளர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் ஜோஷிமத்துக்கு மருத்துவ உதவிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியது.

    விவரங்கள்

    மீட்பு பணிகள் பனிப்பொழிவு காரணமாக இடைநிறுத்தப்பட்டது

    நேற்று தொடங்கிய மீட்பு பணி இரவு நெருங்கியதால் இடைநிறுத்தப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு மற்றும் மேலும் பனிச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருந்ததால் மீதமுள்ள தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பது இன்னும் சவாலானதாக மாறியது.

    முதல் நாள் முடிவில், தேடல் நடவடிக்கை குழுக்கள் 33 தொழிலாளர்களை மீட்க முடிந்தது.

    மீதமுள்ள தேடல் நடவடிக்கை தந்திரமானதாக இருக்கும் என்பதை ஒப்புக்கொண்ட உத்தரகண்ட் பேரிடர் மேலாண்மை செயலாளர் வினோத் குமார் சுமன், பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் ஏழு அடி பனி இருந்ததால், பணியை மிகவும் சவாலானதாக மாற்றியது என்று குறிப்பிட்டார்.

    விபத்து

    விபத்து குறித்த விவரங்கள்

    இந்திய-திபெத்திய எல்லையில் உள்ள கடைசி கிராமமான மனாவில் இராணுவ இயக்கத்தை எளிதாக்குவதற்காக பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 55 தொழிலாளர்கள் காலை 7:15 மணியளவில் BRO முகாம் அருகே திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.

    வெள்ளிக்கிழமை காலை 11:50 மணியளவில், தேடுதல் நடவடிக்கை குழுக்கள் 10 நபர்களை உயிருடன் மீட்டனர்.

    உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, சிக்கியுள்ள தொழிலாளர்கள் பீகார், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    பனிச்சரிவு

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    உத்தரகாண்ட்

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: இறுதிக்கட்டத்தை நெருங்கிய மீட்டுப்பணி, தயார் நிலையில் ஆம்புலன்ஸ் விபத்து
    சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வீல் ஸ்ட்ரெச்சர்கள் கொண்டு மீட்க திட்டம்  விபத்து
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப்பணி உபகரண கோளாறால் சற்று தோய்வு இந்தியா
    உத்தர்காசி சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அர்னால்ட் டிக்ஸ்; யார் அவர்? சுரங்கபாதை

    பனிச்சரிவு

    உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் திடீர் பனிச்சரிவு: 47 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம் உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025