NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள்
    திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள்
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள்

    எழுதியவர் Nivetha P
    Feb 17, 2023
    07:05 pm
    திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள்
    திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள்

    தமிழ்நாட்டில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 33சதவிகிதமாக உயர்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் பசுமை தமிழ்நாடு திட்டம் கடந்த 2021ம்ஆண்டு செயல்முறைக்கு கொண்டுவரப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், தரம் குன்றிய காட்டுப்பகுதியிலுள்ள புதிய உள்நாட்டு மரக்கன்றுகளை நடவுசெய்து மேம்படுத்தவேண்டும் என்பதாகும். இதற்காக மாவட்ட வனஅலுவலர் ராம்மோகன் உத்தரவின் பேரில் திருத்தணி காப்புக்காடு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனத்துறை அதிகாரிகள் ட்ரோன் கேமராக்கள் மூலம் காடுகளில் மரங்களின் அடர்த்தி தன்மையை படம் எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, புதிய மரக்கன்றுகள் நடவுசெய்ய முடிவுசெய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. எனினும், இந்த திட்டங்களுக்கு தேவையான நாற்று, மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய அந்த வனசரகங்களில் போதிய இடம் மற்றும் தண்ணீர் வசதி ஏதும் இல்லை.

    2/2

    பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் மரக்கன்றுகள்

    இந்த காரணத்தினால் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனிமனிதனுக்கு சொந்தமான நிலப்பகுதியில் குத்தகைக்கு நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வன சரகர் அருள்நாதன் கூறுகையில், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் 45ஆயிரம் மரக்கன்றுகள் கன்னிகாபுரம் பகுதியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் தேக்கு, செம்மரம், நீர்மத்தி, இலுப்பை, புளியமரம், நெல்லி, உள்ளிட்ட பல வகையான செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மரக்கன்றுகளை வரும் ஜூலை மாதம் திருத்தணி வனசரகத்தில் தரம் குன்றிய காடுகளில் புதிதாக நடவு செய்து வனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் கன்றுகள் விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    ராணுவ வீரரை அடித்து கொன்ற திமுக கவுன்சிலர்: இழப்பீடு கோரும் முன்னாள் வீரர்கள் திமுக
    'வேலை தருவதற்கு நாங்கள் தயார்' - தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா பேட்டி வணிக செய்தி
    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா திருச்செந்தூர்
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 வானிலை அறிக்கை

    மாவட்ட செய்திகள்

    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் கன்னியாகுமாரி
    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள் தமிழ்நாடு
    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை திருநெல்வேலி
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023