NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி
    4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி

    4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி

    எழுதியவர் Nivetha P
    Nov 11, 2023
    01:21 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஜஸ்தான்-தவுசா மாவட்டத்திற்கு உட்பட்ட ராகுவாஸ் காவல்நிலையத்தில் பூபேந்திரசிங் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    அதே ஸ்டேஷனில் கான்ஸ்டேபிளாக பணிபுரிபவர் வீடு காவல்நிலையத்திற்கு ஒட்டியபடி இருந்த நிலையில் பூபேந்திரசிங் வேலைநேரத்தில் சென்றுள்ளார்.

    அப்போது அங்கு அருகிலுள்ள மற்றொரு கான்ஸ்டேபிளின் 4 வயது மகள் விளையாட வந்துள்ளார்.

    அச்சிறுமியிடம் பூபேந்திர சிங் ஆசையாக பேசி அந்த வாடகை வீட்டில் உள்ள அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அச்சிறுமி தனது தாயிடம் சென்று கூறி அழுதுள்ளார்.

    அந்த சிறுமியின் தந்தை ஜெய்ப்பூர் காவல்நிலையத்தில் கான்ஸ்டேபிளாக தனது இரவுப்பணியினை முடித்து வீடு திரும்பிய பின்னர் இச்சம்பவம் குறித்து தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

    ராகுவாஸ் காவல்நிலையம் சென்று தங்கள் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி புகாரளித்துள்ளனர்.

    கைது 

    போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் 

    ஆனால் அவர்களது புகாரினை காவல்துறை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

    பின்னர் இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றாகக்கூடி காவல்நிலையம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

    அதன்பின்னரே பூபேந்திரசிங் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதனிடையே சம்பவயிடத்திற்கு விரைந்த பாரதிய ஜனதா.,கட்சி எம்.பி.,கிரோடி லால் மீனா,'பாதிக்கப்பட்ட தலித் சிறுமிக்கு நீதி கிடைக்கவே வந்துள்ளேன்' என்றும்,

    'அசோக் கெலாட் அரசின் திறமையின்மை காரணமாக தேர்தல் போன்ற நேரங்களில் கூட காவல்துறையினர் இதுபோன்ற அட்டூழியங்களை செய்கிறார்கள்' என்று பேசியுள்ளார்.

    அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகையில், "குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்"என்று உறுதியளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்
    பலாத்காரம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் இந்தியா
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி

    காவல்துறை

    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்  மதுரை
    கடலூர்: கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை காவல்துறை
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்  காவல்துறை

    காவல்துறை

    பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்: குஜராத்தில் பரிதாபம்  குஜராத்
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி  கம்யூனிஸ்ட்
    'லியோ' படத்தின் வெற்றி விழா - காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம்  லோகேஷ் கனகராஜ்
    கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு  கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025