NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட்டில் தொடரும் கலவரம்: 4 பேர் பலி, 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட்டில் தொடரும் கலவரம்: 4 பேர் பலி, 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயம்
    போலீஸ் ரோந்து கார் உட்பட பல வாகனங்களுக்கு கும்பல் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது

    உத்தரகாண்ட்டில் தொடரும் கலவரம்: 4 பேர் பலி, 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 09, 2024
    09:15 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்டின் ஹல்த்வானியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸா மற்றும் மசூதியை இடித்ததால் ஏற்பட்ட வன்முறையில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

    மேலும், வாகனங்கள் மற்றும் காவல் நிலையத்திற்கு தீ வைத்து கற்களை வீசியதை அடுத்து, அங்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    செய்தி நிறுவனமான பிடிஐ படி, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் போலீஸ்காரர்கள். மீதமுள்ளவர்கள் உள்ளூர் மதரஸா மற்றும் அதன் வளாகத்தில் உள்ள மசூதியை இடிப்பதில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்.

    ஹல்த்வானியில் நடந்த வன்முறையில் 4 பேர் பலியாகியுள்ளதாக மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி, ஏ.பி. அன்ஷுமன், செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் உறுதிப்படுத்தினார்.

    வன்முறை

    இணைய சேவைகள் முடக்கம்

    மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் அரசு உறுதி செய்துள்ளது. வன்முறையைத் தொடர்ந்து இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

    மேலும் நைனிடாலில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடவும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    வன்முறை அதிகரித்ததால், ஹல்த்வானியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

    மாநிலத் தலைநகர் டேராடூனில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தலைமைச் செயலாளர் ராதா ரதுரி மற்றும் டிஜிபி அபினவ் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஹல்த்வானியின் நிலைமையை ஆய்வு செய்ய ஆலோசனை நடத்தினார்.

    அனைவரையும் அமைதி காக்க வேண்டும் என்றும், அராஜகம் செய்பவர்களை கடுமையாகக் கையாளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

    முன்கதை

    எதற்காக இந்த கலவரம்?

    சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில், மதரஸாவும், மசூதியும் இருந்ததாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இடிப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    மசூதி மற்றும் மதரஸாவை இடிக்க தொடங்கியதும், ஆத்திரமடைந்த மக்கள், பெரும் எண்ணிக்கையில் கூடி, இடிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

    ஒரு புல்டோசர் மதரஸா மற்றும் மசூதியை இடித்துத் தள்ளியதும், கூடியிருந்த கும்பல், காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது கற்களை வீசியது. இதில் பலர் காயமடைந்தனர்.

    போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கும்பலை கலைக்க முயன்றனர்.

    இருப்பினும், போலீஸ் ரோந்து கார் உட்பட பல வாகனங்களுக்கு கும்பல் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது. இதில் பன்பூல்புரா காவல் நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    கலவரம்

    சமீபத்திய

    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி

    உத்தரகாண்ட்

    இந்தியாவில் முதல்முறையாக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது உத்தரகாண்ட் பாஜக
    உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்  காவல்துறை
    தொடரும் மீட்பு பணிகள்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 பேரை தொடர்பு கொண்டது மீட்புக் குழு  காவல்துறை
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிந்து விபத்து: 3வது நாளாக தொடரும் 40 தொழிலாளர்களை மீட்கும் பணி  விபத்து

    கலவரம்

    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: தொடர்ந்து ஊரை விட்டு வெளியேறும் மக்கள்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025