NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுற்றுச்சூழல் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட 21 நகரங்கள்; பட்டியலில் இடம்பிடித்த திருச்சி, தூத்துக்குடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுற்றுச்சூழல் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட 21 நகரங்கள்; பட்டியலில் இடம்பிடித்த திருச்சி, தூத்துக்குடி 
    காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட 21 நகரங்கள்; பட்டியலில் திருச்சி, தூத்துக்குடி

    சுற்றுச்சூழல் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட 21 நகரங்கள்; பட்டியலில் இடம்பிடித்த திருச்சி, தூத்துக்குடி 

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 09, 2024
    04:33 pm

    செய்தி முன்னோட்டம்

    சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட 131 நகரங்களின் சமீபத்திய தரவுகளின்படி, 2017-18 அளவுகளுடன் ஒப்பிடும்போது 2023-24இல் 21 நகரங்கள் முக்கியமான காற்று மாசுபடுத்தும் PM10 இன் செறிவை 40 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளன.

    திருச்சி, தூத்துக்குடி, கிரேட்டர் மும்பை, வாரணாசி, ஆக்ரா, லக்னோ, கான்பூர், டேராடூன் மற்றும் தன்பாத் உள்ளிட்ட நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    PM10 (10 மைக்ரோகிராம் விட்டம் தாண்டாத நுண்துகள்கள்) சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்குள் நுழையும் அளவுக்கு சிறியது. இது கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகிறது.

    இந்த நகரங்கள் தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் இலக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எட்டியிருந்தாலும், அவற்றில் கிரேட்டர் மும்பை, வாரணாசி, ஆக்ரா உட்பட பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பை (தேசிய தரநிலைகள்) பூர்த்தி செய்யவில்லை.

    தூய்மையான நகரங்கள்

    தூய்மையான நகரங்கள் பட்டியலில் தமிழக நகரங்கள்

    மாசு அளவுகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமான குறைப்பு, தூய்மையான நகரங்கள் என்ற தரத்தை பூர்த்தி செய்யும் 18 நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் திருச்சி மற்றும் தூத்துக்குடி மற்றும் ஆந்திராவின் கடப்பா ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

    2019 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 2017-18ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டிலிருந்து 2025-26ஆம் ஆண்டிற்குள் PM10 அளவை 40 சதவிகிதம் குறைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

    ஒட்டுமொத்தமாக, 131 மாசுபடுத்தும் நகரங்களில் 95 வெவ்வேறு சதவீதங்களில் PM10 அளவைக் குறைத்து முன்னேற்றம் கண்டுள்ளன.

    செப்டம்பர் 7 ஆம் தேதி ஜெய்ப்பூரில் 'நீல வானத்துக்கான தூய்மையான காற்றின் சர்வதேச தினத்தை' அனுசரிக்கும் விழாவில், இந்த நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான தரவு அமைச்சகத்தால் பகிரப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுற்றுச்சூழல்
    திருச்சி
    தூத்துக்குடி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சுற்றுச்சூழல்

    கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர் உலக செய்திகள்
    நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஈக்கோ ஃபிரெண்ட்லி பர்னிச்சர் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்! உடல் நலம்
    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு சுற்றுச்சூழல் பாதிப்புகள்
    ஸ்டார்ட்-அப் துறையில் 3வது இடத்தில் இந்தியா - என்னென்ன முன்னேற்றங்கள்? தொழில்நுட்பம்

    திருச்சி

    சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை - வருமானவரி நுண்ணறிவு பிரிவு சென்னை
    விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது  காவல்துறை
    பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து  ரயில்கள்
    கார்கில் நினைவு தினம் - திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்  தமிழ்நாடு

    தூத்துக்குடி

    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  திருமணம்
    தீபாவளிக்கு படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கறி  விருந்து வைத்த விஷால் இயக்குனர்
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம் சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கனமழை - வானிலை ஆய்வு மையம் பருவமழை

    தமிழ்நாடு

    உஷாரா இருப்பேன், கவலை வேண்டாம்; ரஜினிகாந்த் அறிவுரையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின் ரஜினிகாந்த்
    முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான முன்பதிவு காலக்கெடு நீட்டிப்பு; தமிழக அரசு அறிவிப்பு விளையாட்டு
    வாழை திரைப்படம் சூப்பர்; மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மாரி செல்வராஜ்
    அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: கண்காட்சியை பார்வையிட ஆகஸ்ட் 30 வரை அனுமதி அறநிலையத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025