NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள்!
    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் ஹெலிகாப்டர் பிரசாந்த்(படம்: இந்து தமிழ்)

    2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2022
    06:26 pm

    செய்தி முன்னோட்டம்

    2022ஆம் ஆண்டில் பல முக்கிய நிகழ்வுகள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. அதையெல்லாம் எழுதுவதற்குள் இந்த வருடமே முடிந்து விடும்.

    அதனால், இந்த வருடம் நிகழ்ந்த மிக முக்கியமான 10 நிகழ்வுகளை மட்டும் இப்போது பார்க்கலாம்.

    இந்தியாவிற்கு ஜி20 மாநாட்டின் ப்ரெசிடெண்சி பதவி கிடைத்தது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் இதன் உச்சி மாநாட்டில் இதுவரை இல்லாத அளவு 43 பிரதிநிதி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

    இந்தியாவின் முதல் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஜூலை மாதம் பதவியேற்றார்.

    5000கிலோ மீட்டர்கள் தாண்டி தாக்கக்கூடிய போர் ஆயுதமான அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.

    இஸ்ரோவின் PSLV-C54, EOS-06 செயற்கைக்கோள் எட்டு நானோ செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    31 Dec 2022

    அடுத்த 6 நிகழ்வுகள்:

    ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்திய கடற்படை கொடி மாற்றப்பட்டது.

    அனைத்து பெண்களுக்கும் 24 வாரம் வரை சட்டபூர்வாமாக கரு கலைப்பு செய்துகொள்ளும் உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. திருமணம் ஆன பெண்கள் திருமணம் ஆகாத பெண்கள் என்ற வரையறை இந்த உரிமைக்கு கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    போர் கப்பல் INS விக்ராந்த், போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு பாதுகாப்புப்படை மேலும் பலப்படுத்தப்பட்டன.

    அக்டோபர் மாதம் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 4ஜி-யை விட 10 மடங்கு அதிவேகமானது.

    நவம்பரில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-S ஏவப்பட்டது.

    மத்திய பல்கலைகழங்களில் சேர்வதற்கு பொது நுழைவு தேர்வை யுஜிசி அறிவித்தது. இதனால் பெரும் சர்ச்சையும் கிளம்பியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா-சீனா மோதல்
    மார்ச் 2023 இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்: வருமானவரித் துறை பயனர் பாதுகாப்பு
    7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது வைரல் செய்தி
    தென் கொரியாவை சேர்ந்தவர் இந்தியாவில் பலி! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025