NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல்
    கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது

    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல்

    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023
    01:59 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் போதை பொருள் விற்பனைகளை முற்றிலும் தடுக்க போதைத்தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதைபொருள் கடத்தலை தடுக்க கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் சோதனைச் சாவடியில் போலீசார் 24 மணிநேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், நேற்று அவ்வழியாக சொகுசுகார் ஒன்று போலீஸ் நிறுத்தக்கூறியும் நிறுத்தாமல் சென்றுள்ளது.

    அதனுள் ஏதோ பார்சல்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை மடக்கி பிடிக்குமாறு ஊத்துக்கோட்டை சோதனைசாவடியில் உள்ள மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் அளித்தார்கள்.

    அதன் பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் தேவிகா, எஸ்.ஐ.க்கள் ஆறுமுகம், அன்பு ஆகியோர் ஊத்துக்கோட்டை அண்ணா சிலை நான்கு முனை சந்திப்பில் தீவிரமாக சோதனை செய்துள்ளனர்.

    இருவர் கைது

    காரை மடக்கி பிடித்த போலீசார் - 2கிலோ 200 கிராம் கஞ்சா,2 செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல்

    அப்பொழுது அவ்வழி வந்த குறிப்பிட்ட காரை மடக்கி பிடித்த அவர்கள், அதனுள் இருந்த ட்ரைவர் மற்றும் இன்னொரு நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் காரை போலீசார் சோதனை செய்துள்ளனர்.

    அப்போது, காரில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து, அந்த கஞ்சாவையும், அதனை கடத்த பயன்படுத்திய கார் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் பிடிபட்டோரை விசாரித்ததில் ஒருவர் சென்னையை சேர்ந்த கோபி(22), மற்றும் மும்பையை சேர்ந்த அவர் கூட்டாளி சுரேஷ்(35) என்றும் தெரியவந்துள்ளது.

    ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சென்னையில் விற்க முயற்சி செய்த இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாகனம்
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்

    வாகனம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல்
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025