NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல்
    இந்தியா

    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல்

    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல்
    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023, 01:59 pm 1 நிமிட வாசிப்பு
    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல்
    கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது

    தமிழகத்தில் போதை பொருள் விற்பனைகளை முற்றிலும் தடுக்க போதைத்தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதைபொருள் கடத்தலை தடுக்க கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் சோதனைச் சாவடியில் போலீசார் 24 மணிநேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று அவ்வழியாக சொகுசுகார் ஒன்று போலீஸ் நிறுத்தக்கூறியும் நிறுத்தாமல் சென்றுள்ளது. அதனுள் ஏதோ பார்சல்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை மடக்கி பிடிக்குமாறு ஊத்துக்கோட்டை சோதனைசாவடியில் உள்ள மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் அளித்தார்கள். அதன் பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் தேவிகா, எஸ்.ஐ.க்கள் ஆறுமுகம், அன்பு ஆகியோர் ஊத்துக்கோட்டை அண்ணா சிலை நான்கு முனை சந்திப்பில் தீவிரமாக சோதனை செய்துள்ளனர்.

    காரை மடக்கி பிடித்த போலீசார் - 2கிலோ 200 கிராம் கஞ்சா,2 செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல்

    அப்பொழுது அவ்வழி வந்த குறிப்பிட்ட காரை மடக்கி பிடித்த அவர்கள், அதனுள் இருந்த ட்ரைவர் மற்றும் இன்னொரு நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் காரை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது, காரில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்த கஞ்சாவையும், அதனை கடத்த பயன்படுத்திய கார் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்டோரை விசாரித்ததில் ஒருவர் சென்னையை சேர்ந்த கோபி(22), மற்றும் மும்பையை சேர்ந்த அவர் கூட்டாளி சுரேஷ்(35) என்றும் தெரியவந்துள்ளது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சென்னையில் விற்க முயற்சி செய்த இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    வாகனம்
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு திரைப்பட வெளியீடு
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்

    வாகனம்

    குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்! பைக் நிறுவனங்கள்
    மெர்சிடிஸ் பென்ஸ் காரின் புதிய GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்! கார் உரிமையாளர்கள்
    ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஹூண்டாய் வெர்னா 2023 vs ஹோண்டா சிட்டி - எது சிறந்த கார்? கார் உரிமையாளர்கள்

    மாவட்ட செய்திகள்

    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி கோவை
    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு தமிழ்நாடு
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு தமிழ்நாடு
    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் கோவை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023