NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்!
    உபியில் மட்டும் ஒரு நாளுக்கு 6 வரதட்சணை மரணங்கள் ஏற்படுகிறது(படம்: இந்து தமிழ்)

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 18, 2022
    11:29 am

    செய்தி முன்னோட்டம்

    5 ஆண்டுகளில் சுமார் 35,493 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக ஒரு அதிர்ச்சியான தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வெளியிட்டுள்ளார்.

    வரதட்சணைக் கொடுமைகளால் ஏற்படும் மரணங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் வரதட்சணை கொடுமையால் நாடு முழுவதும் நடக்கும் மரணங்கள் பற்றிய தரவுகளை வெளியிட்டுள்ளார்.

    நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் வரதட்சணை மரணங்கள் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள் நிகழ்கிறது.

    உத்தரப்பிரதேசத்தில் மட்டும் ஒரு நாளுக்கு 6 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    வரதட்சணை

    வரதட்சணை மரணங்கள் பற்றி வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள்:

    2017 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வருடத்திலும் ஏற்பட்ட வரதட்சணை மரணங்களின் எண்ணிக்கை:

    2017ஆம் ஆண்டு- 7,466

    2018ஆம் ஆண்டு-7,167

    2019ஆம் ஆண்டு-7,141

    2020ஆம் ஆண்டு-6,753

    2021ஆம் ஆண்டு-6,753

    இந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 11,874 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

    மேலும், பீகார் மாநிலத்தில் 5,354 மரணங்களும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2,859 மரணங்களும் பதிவாகி இருக்கிறது.

    அதிக வரதட்சணை மரணங்கள் ஏற்பட்ட மாநிலங்களின் பட்டியலில் இதற்கு அடுத்த இடத்தை மேற்கு வங்கமும்(2,389) ராஜஸ்தானும்(2,244) பிடித்துள்ளது.

    வரதட்சணை கொடுமைகளால் ஆயிர கணக்கான மரணங்கள் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் வரமாட்டார் என இதர தகவல்; ஆஸ்திரேலிய வீரர்களும் தவிர்க்க வாய்ப்பு ஐபிஎல் 2025
    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல் முடிவு
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! தொழில்நுட்பம்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025