NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு 
    திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு

    திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு 

    எழுதியவர் Nivetha P
    Oct 03, 2023
    02:55 pm

    செய்தி முன்னோட்டம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    சுமார் 10 கி.மீ., நீண்ட வரிசையில், 48 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதியினரின் 2 வயது ஆண் குழந்தை கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை வளசரவாக்கம் பகுதியினை சேர்ந்தவர் சந்திரசேகர், இவரது மனைவி மீனா.

    இவர்கள் தங்கள் 2 மகன்களுடன் சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்துள்ளனர்.

    அதன்படி அவர்கள் நேற்று(அக்.,3)நள்ளிரவு சாமி தரிசனம் செய்து முடித்த நிலையில், சென்னைக்கு திரும்ப மலையடிவார பேருந்து நிலையத்தில் இரவு தங்கியதாக கூறப்படுகிறது.

    விசாரணை 

    குழந்தையை கடத்திய மர்ம நபரை தேடும் பணி தீவிரம் 

    அங்கு இவர்கள் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், அதிகாலை கிட்டத்தட்ட 2.20 மணிக்கு இவர்களது 2 வயது ஆண் குழந்தை அருள்முருகன் காணாமல் போயுள்ளார்.

    இதனால் பதறிப்போன அவர்கள் பக்கத்திலுள்ள அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்துள்ளனர்.

    ஆனால் குழந்தை கிடைக்கவில்லை என்பதால் காவல்துறைக்கு புகாரளித்துள்ளார்கள்.

    அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் உடனடியாக பேருந்து நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சியினை ஆய்வுச்செய்தனர்.

    அதில் 2.10 மணியளவில் மர்மநபர் ஒருவர் குழந்தையை தூக்கிச்சென்றது பதிவாகியிருந்தது.

    இதனையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டது.

    கடத்தப்பட்ட குழந்தை மாதவமலை பகுதியிலுள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில், காவல்துறை அங்கு விரைந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஓப்படைத்துள்ளனர்.

    எனினும் குழந்தையை கடத்திய சுதாகரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    சென்னை
    கடத்தல்
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா

    சென்னை

    சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார்  மு.க ஸ்டாலின்
    ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி  செந்தில் பாலாஜி
    சென்னை மெட்ரோ குறித்த புதிய அப்டேட் கொடுத்த அதிகாரிகள்  மெட்ரோ
    வண்டலூர் உயிரியல் பூங்கா - 2 மடங்காக உயர்ந்த நுழைவு கட்டணம்  மாநில அரசு

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்

    காவல்துறை

    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025