NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி 

    ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2024
    07:55 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்று வரும் என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

    இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய இந்த கூட்டு நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது.

    பாரமுல்லா மாவட்டத்தின் (PD) சோபோரின் ஹடிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக குறிப்பிட்ட உளவுத்துறை உள்ளீடுகள் கிடைத்தை தொடர்ந்து இன்று அதிகாலை போலீசார் என்கவுன்டரை தொடங்கினர்.

    "பயங்கரவாதிகளின் இருப்பு குறித்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவல் கிடைத்தை அடுத்து, பிடி சோபோரின் ஹடிபோரா பகுதியில் இன்று இந்திய ராணுவம் & ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து கூட்டு நடவடிக்கையை துவக்கியது.இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்." என்று கார்ப்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்தியா 

    நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்  பிரதமர் மோடி 

    "பிடி சோபோரின் ஹடிபோரா பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர்." என்று காஷ்மீர் மண்டல காவல்துறை X இல் பதிவிட்டிருந்தது.

    துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் இரண்டு உடல்கள் காணப்பட்டதாகவும், ஆனால் அவை இதுவரை மீட்கப்படவில்லை என்றும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாதுகாப்புப் படையினர், ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு ராணுவ ஜவான் ஆகியோர் காயமடைந்தனர்.

    நாளை பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் போக உள்ள நிலையில், இன்று இது நடந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    துப்பாக்கி சூடு

    சமீபத்திய

    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா
    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி
    அடிக்கடி அலாரத்தை ஸ்னூஸ் செய்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க தூக்கம்

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்டப்படி செல்லும்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன? உச்ச நீதிமன்றம்
    சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு என்ன எதிர்காலத்தை வழங்கியுள்ளது? உச்ச நீதிமன்றம்

    துப்பாக்கி சூடு

    பெங்களூரில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கொன்று பிடித்தனர் பெங்களூர்
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம், 4 பேர் கடத்தல்  மணிப்பூர்
    மணிப்பூரில் ராணுவ வீரரின் தாய், 3 குடும்பத்தினர் கடத்தல் மணிப்பூர்
    மியான்மர் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே துப்பாக்கிச்சண்டை: இந்திய எல்லையில் பதட்டம்  மிசோரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025