NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவிலில் இஸ்லாமியர்கள் வேலை செய்யக்கூடாது: மத்திய பிரதேச அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவிலில் இஸ்லாமியர்கள் வேலை செய்யக்கூடாது: மத்திய பிரதேச அரசு 
    1988 முதல் மா சாரதா கோவிலில் பணிபுரியும் இரண்டு முஸ்லிம் ஊழியர்கள் இதனால் வேலையை இழக்கவுள்ளனர்.

    கோவிலில் இஸ்லாமியர்கள் வேலை செய்யக்கூடாது: மத்திய பிரதேச அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 19, 2023
    05:26 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள மைஹார் நகரம் மா சாரதா கோவிலுக்கும், பாபா அலாவுதீன் கான் நிறுவிய மைஹார் கரானாவுக்கும் பெயர் பெற்ற நகரமாகும்.

    ஆனால், இந்த புகழ்பெற்ற கோயிலின் நிர்வாகக் குழுவில் இனி முஸ்லிம் ஊழியர்கள் பணியாற்ற முடியாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    மாநில சமய அறநிலையத்துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சகத்தின் துணைச் செயலர் புஷ்பா காலேஷ் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தில், ஜனவரி 17ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இணங்கி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோயில் கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    1988 முதல் மா சாரதா கோவிலில் பணிபுரியும் இரண்டு முஸ்லிம் ஊழியர்கள் இதனால் வேலையை இழக்கவுள்ளனர்.

    மத அடிப்படையில் எந்த ஊழியரையும் வேலையில் இருந்து நீக்கக்கூடாது என்று மாநில அரசின் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    details

    நகரத்திற்குள் இறைச்சி மற்றும் மதுபானத்திற்கு தடை 

    எனினும், மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    மைஹார் நகரில் இறைச்சி மற்றும் மது விற்பனைக்கு தடை விதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வலதுசாரி ஆதரவாளர்களான விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) மற்றும் பஜ்ரங் தள் ஆகிய அமைப்பினர் ஜனவரி மாதம் கலாச்சாரம், மத நம்பிக்கை மற்றும் அறநிலையத்துறை அமைச்சரான உஷா சிங் தாக்கூரை அணுகியதை அடுத்து இந்த இரண்டு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகக் குழுவின் தலைவரான மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    மேலோட்டமாகப் பார்த்தால், இந்த உத்தரவு இரண்டு ஊழியர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், இது இஸ்லாமியர்களுக்கு எதிரான பெரும் ஒடுக்குமுறை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய பிரதேசம்

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்! குஜராத்
    பிரேசில் பாரா பேட்மிண்டன் ஓபன் 2023 : 24 பதக்கங்களை வாரிக் குவித்த இந்தியா இந்திய அணி
    அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம்  தன்பால் ஈர்ப்பாளர்கள்

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து விமானப்படை
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' பாஜக
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025